பதிவு செய்த நாள்
14 மே2013
00:27
புதுடில்லி:நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் அடிப்படையில் கணக்கிடப்படும், நாட்டின் சில்லரை பணவீக்கம், சென்ற ஏப்ரல் மாதத்தில், 9.39 சதவீதமாக சரிவடைந்துள்ளது. இது, இதற்கு முந்தைய மார்ச் மாதத்தில், 10.39 சதவீதம் என்ற அளவிலும், பிப்ரவரி மாதத்தில், 10.91 சதவீதம் என்ற அளவிலும் இருந்தது. ஆக, தொடர்ந்து இரண்டு மாதங்களாக, சில்லரை பணவீக்கம் குறைந்து வருகிறது.
காய்கறிகள்:கடந்த ஏப்ரலில், காய்கறிகளின் விலை, 5.43 சதவீதம் என்ற அளவில் குறைந்துள்ளது. இது, மார்ச் மாதத்தில், 12.16 சதவீதம் என்ற அளவில் அதிகரித்து காணப்பட்டது.மதிப்பீட்டு மாதத்தில், முட்டை, மீன் உள்ளிட்ட புரதச் சத்து நிறைந்த பொருட்களின் விலை, 13.60 சதவீதம் என்ற அளவிலும், எண்ணெய் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுப் பொருட்களின் விலை, 7.52 சதவீதம் என்ற அளவிலும் உள்ளது.சென்ற ஏப்ரல் மாதத்தில், ஒட்டு மொத்த உணவு மற்றும் பானங்கள் ஆகியவற்றிற்கான பணவீக்கம், 10.61 சதவீதம் என்ற அளவில் குறைந்துள்ளது.
இது, இதற்கு முந்தைய மார்ச் மாதத்தில், 12.42 சதவீதம் என்ற அளவில் உயர்ந்து காணப்பட்டது. மதிப்பீட்டு மாதத்தில், முக்கிய உணவு தானியங்களின் விலை, மிக அதிகபட்சமாக, 16.65 சதவீதம் என்ற அளவில் அதிகரித்துள்ளது. இது தவிர, பருப்பு வகைகளின் விலை, 10.91 சதவீதம் என்ற அளவிலும், சர்க்கரையின் விலை, 10.49 சதவீதம் என்ற அளவிலும் உள்ளது.மேலும், ஆடைகள் மற்றும் காலணிகள் ஆகியவற்றிற்கான பணவீக்கம், 10.22 சதவீதம் என்ற அளவில் உள்ளது.சென்ற ஏப்ரலில், நகரங்களுக்கான, சில்லரை பணவீக்கம், 9.73 சதவீதமாக குறைந்துள்ளது. இது, மார்ச் மாதத்தில், 10.38 சதவீதமாக அதிகரித்து காணப்பட்டது.
இதே காலத்தில், கிராமங்களுக்கான சில்லரை பணவீக்கம், 10.33 சதவீதத்தில் இருந்து, 9.16 சதவீதமாக சரிவடைந்து உள்ளது.பொது பணவீக்கம்:மொத்த விலைக் குறியீட்டு எண் அடிப்படையில் கணக்கிடப்படும், நாட்டின் பொதுப் பணவீக்கம் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.சென்ற மார்ச் மாதத்தில், இப்பணவீக்கம், கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, 5.96 சதவீதம் என்ற அளவில் குறைந்து காணப்பட்டது. இருப்பினும், இது, ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள இலக்கு அளவை காட்டிலும் அதிகமாகும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|