348 மருந்துகள் விலை விரைவில் குறையும்348 மருந்துகள் விலை விரைவில் குறையும் ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.56  உயர்வு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 உயர்வு ...
மொபைல்போன் கோபுர கட்டடங்களுக்கு வணிக ரீதியில் சொத்து வரி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மே
2013
10:41

"மொபைல்போன் கோபுரங்கள் உள்ள கட்டடங்களுக்கு, வணிக கட்டடங்களுக்கு இணையான சொத்து வரி விதிக்க வேண்டும்' என, உள்ளாட்சி அமைப்புக்களுக்கு, மாநில நிதி ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புக்களின் நிதி மதிப்பீடு குறித்து, நான்காவது மாநில நிதி ஆணையம் ஆய்வு செய்து அறிக்கை சமர்பித்துள்ளது. இதில், சொத்து வரியை நேரடியாக, வீடுகளுக்குச் சென்று வசூலிப்பதால் பலவேறு குளறுபடிகளும், பணம் கையாடல் சம்பவங்களும் நடப்பதாக சுட்டிக் காட்டியுள்ளது. இதைத் தவிர்க்க, வீடுகளுக்குச் சென்று வரி வசூலிக்கும் நடைமுறையை, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புக்கள் கைவிட வேண்டும் எனவும், இதற்கு பதிலாக, வங்கிகள், அஞ்சல் நிலையங்கள், மின்னஞ்சல் வாயிலாகவும் சொத்து வரி செலுத்துவதை ஊக்கப்படுத்த வேண்டும் என, பரிந்துரைத்துள்ளது.
கோவை மாநகராட்சியில், ஹெச்.டி.எப்.சி., வங்கி, வரி வசூல் பணியை வெற்றிகரமாக செய்து வருவதால், பணியாளர் செலவு மிச்சப்பட்டுள்ளதோடு, வசூல் முறையும் முன்னேறியுள்ளதாகவும்,நிதி ஆணையம் தெரிவித்துள்ளது. மொபைல்போன் கோபுரம் ; மேலும், மாநில நிதி ஆணையம் தந்துள்ள பரிந்துரைகள்: மொபல்போன் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ள கட்டடங்கள், வளாகங்களுக்கு, வணிக கட்டடங்களுக்கு இணையாக சொத்து வரி வசூலிக்க வேண்டும்; இதற்கு, நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும். அற நோக்கத்தில் நடத்தப்படும் நிறுவனங்களைத் தவிர, பிற சுயநிதிக்கல்வி நிறுவனங்களை, சொத்து வரி விதிப்பின் கீழ் கொண்டு வரும் வகையில், சட்டத்தில், தேவையான திருத்தங்கள் கொண்டு வர வேண்டும். புவித் தகவல் முறை(ஜி.பி.எஸ்.,) மூலம் சொத்துக்களை வரைபடமிடுவது, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புக்களின் சொத்து வரி வருவாயை கணிசமான அளவில் மேம்படுத்தும் என்பதால், பெரிய நகராட்சிகள், மாநகராட்சிகளுக்கும் விரிவுபடுத்தலாம். சொத்துக்களில், வரி மதிப்பீட்டு அதிகாரிகள் கட்டாயக் கள ஆய்வு செய்யும் வகையில், சுய மதிப்பீட்டு முறை அமல்படுத்த வேண்டும். சொத்து உரிமையாளர்கள் சுய மதிப்பீட்டு படிவத்தில், தவறுகள் கண்டறிந்தால், சொத்து வரியில், 100 சதவீதம் அபராதம் விதிக்க வேண்டும். இவ்வாறு ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)