பதிவு செய்த நாள்
17 மே2013
09:30
புதுடில்லி; மத்திய அரசின், புதிய மருந்து கொள்கை அமலுக்கு வந்துள்ளதை அடுத்து, உயிர் காக்கும் மருந்துகள் உட்பட, 348 மருந்துகளின் விலை, 80 சதவீதம் வரை, குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. உயிர் காக்கும் மருந்துகள் மற்றும் அத்தியாவசிய மருந்துகளின் விலை, அளவுக்கு அதிகமாக இருப்பதாக புகார் எழுந்ததை அடுத்து, மருந்துகளின் விலைகளை கட்டுப்படுத்த, மத்திய அரசு முடிவு செய்தது. இதன்படி, புதிய மருந்து கொள்கைக்கு, மத்திய அமைச்சரவை, கடந்தாண்டு ஒப்புதல் அளித்தது. புதிய கொள்கை, கடந்த, 15ம் தேதி முதல், அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து, புற்று நோய்க்கான மருந்து மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் உட்பட, 348 மருந்துகளின் விலைகள் குறைய உள்ளன. இந்த, 348 மருந்துகளின் விலைகளும், 50லிருந்து, 80 சதவீதம் வரை, குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|