பதிவு செய்த நாள்
19 மே2013
00:35
மும்பை:நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, நடப்பு மே மாதம் 10ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 61 கோடி டாலர் (3,355 கோடி ரூபாய்) குறைந்து, 29,369 கோடி டாலராக (16.15 லட்சம் கோடி ரூபாய்) சரிவடைந்துள்ளது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது, முந்தைய வாரத்தில், 206 கோடி டாலர் (11,330 கோடி ரூபாய்) சரிவடைந்து, 29,430 கோடி டாலராக (16.19 லட்சம் கோடி ரூபாய்) வீழ்ச்சி கண்டிருந்தது. ஆக, தொடர்ந்து இரண்டு வாரங்களாக, அன்னியச் செலாவணி கையிருப்பு குறைந்து வருகிறது.மேலும், எஸ்.டீ.ஆர்., மற்றும் சர்வதேச நிதியத்தில் நம்நாடு வைத்துள்ள செலாவணிகளின் மதிப்பு முறையே, 3.19 கோடி டாலர் மற்றும் 1.64 கோடி டாலர் சரிவடைந்துள்ளது.கணக்கீட்டு வாரத்தில், கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பில் மாற்றம் எதுவுமின்றி, 2,397 கோடி டாலர் என்ற அளவிலேயே உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|