பதிவு செய்த நாள்
20 மே2013
00:48
வாஷிங்டன்:வரும் 2030ம் ஆண்டுவாக்கில், வளரும் நாடுகளின் உலகளவிலான ஒட்டு மொத்த முதலீட்டில், இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளின் பங்களிப்பு, 38 சதவீதமாக உயரும் என, உலக வங்கி தெரிவித்து உள்ளது.இதுகுறித்து, வெளியிடப்பட்ட அறிக்கையின் விவரம்: சர்வதேச அளவில், இந்தியாவும், சீனாவும், மிகப் பெரிய அளவில் முதலீடு செய்யக்கூடிய நாடுகளாக உருவாகும். இதன் மூலம், வரும் 2030ம் ஆண்டில், சர்வதேச பொருளாதார வடிவமே மாறிவிடும்.உலக நாடுகளின் சர்வதேச மூலதனத்தில், 50 சதவீதம், அதாவது, 158 லட்சம் கோடி ரூபாய், வளரும் நாடுகளில் இருக்கும். இது, தற்போது, மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவாக உள்ளது. இதில், கிழக்காசியா, லத்தீன் அமெரிக்கா ஆகிய நாடுகளின் பங்களிப்பு அதிக அளவில் உள்ளது.கடந்த 2000ம் ஆண்டு நிலவரப்படி, சர்வதேச முதலீடுகளை பொறுத்தவரை, வளரும் நாடுகளின் பங்களிப்பு, ஐந்தில் ஒன்று என்ற அளவில் உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|