நெல் பயிரிடும் பரப்பளவு2.40 லட்சம் ஹெக்டேராக சரிவுநெல் பயிரிடும் பரப்பளவு2.40 லட்சம் ஹெக்டேராக சரிவு ... இந்தியா, சீனாவின் சர்வதேசமுதலீடு 38 சதவீதம் உயரும் இந்தியா, சீனாவின் சர்வதேசமுதலீடு 38 சதவீதம் உயரும் ...
மருத்துவ தகவல் நிர்வாக திட்டத்தில் குளறுபடி:மத்திய தணிக்கை துறை தகவல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மே
2013
00:39

சென்னை:அரசு மருத்துவமனைகளின் சேவையை மேம்படுத்தும் நோக்கில் கொண்டு வரப்பட்ட, "மருத்துவ தகவல் மேலாண்மைத் திட்டம்' தமிழகத்தில், சரிவர செயல்படுத்தப்படவில்லை என, மத்திய கணக்கு தணிக்கை அறிக்கையில் (சி.ஏ.ஜி.,) தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனைகள்:பல்வேறு அரசு துறை திட்டங்கள் குறித்த, 2011 -12ம் ஆண்டிற்கான, சி.ஏ.ஜி., அறிக்கை, வெளியிடப்பட்டது. அதில், அரசு மருத்துவமனைகளில், செயல்பாட்டில் உள்ள "மருத்துவ தகவல் மேலாண்மைத் திட்டம்' குறித்து, தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த, 2008 ஜூன் முதல், 2012 மே மாதம் வரை, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், 20 அரசு மருத்துவமனைகளில், இத்திட்டத்தின் செயல்பாடு குறித்து, ஆய்வு செய்யப்பட்டது. அதில், குறிப்பிட்ட மருத்துவமனைகளில், புறநோயாளிகளாக சிகிச்சைப் பெற்ற, 14.04 லட்சம் பேரில், 3.84 லட்சம் பேருக்கு, ஊசி மருந்து போட பரிந்துரைக்கப்பட்டது.ஆனால், மருத்துவ தகவல் மேலாண்மை திட்ட தகவல் தளத்தில், 8,702 பேருக்கு மட்டும், ஊசி மருந்து போடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பரிசோதனைக்கு பரிந்துரைக்கப்பட்டோர் எண்ணிக்கை, 2.91 லட்சத்துக்கு பதிலாக, 2.41 லட்சமாக பதிவாகி உள்ளது. கடந்த, 2011ம் ஆண்டு, நவம்பர் முதல், 2012ம் ஆண்டு மே மாதம் வரை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கும்பகோணம், ஆவுடையார்கோவில் உள்ளிட்ட, 16 இடங்களில், அரசு மருத்துவமனைகளுக்கு வினியோகிக்கப்பட்ட மருந்து, மாத்திரைகள் குறித்த தகவல்கள் ஆய்வு செய்யப்பட்டன.
காலாவதி தேதி:அதில், 26.17 லட்சம் பதிவுகளில், ஒரே குறியீட்டு எண் மற்றும் தொகுதி கொண்ட மருந்துகளின், 1.42 லட்சம் பதிவுகளில், காலாவதி தேதிகள், டி.என்.எம்.எஸ்.சி.,தகவல் தளத்தில் இருந்த தேதிகளில் இருந்து வேறுபட்டு இருந்தது தெரியவந்தது.இவ்வாறு, தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)