ஓசூர் ஜெர்பரா மலர்களுக்கு வரவேற்புஓசூர் ஜெர்பரா மலர்களுக்கு வரவேற்பு ... ஆறாவது பொருளாதார கணக்கெடுப்பு துவக்கம்:வருமானத்தை தெரிவிக்க அவசியமில்லை ஆறாவது பொருளாதார கணக்கெடுப்பு துவக்கம்:வருமானத்தை தெரிவிக்க ... ...
எஸ் அண்டு பி எச்சரிக்கை: மத்திய அரசு அதிருப்தி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மே
2013
00:51

இந்தியா, நிதி சீர்திருத்த நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளத் தவறினால், அதன் கடன் தகுதி குறியீடு, மேலும் குறைக்கப்படும் என, தர நிர்ணய நிறுவனமான, ஸ்டாண்டர்ட் அண்டு பூர்ஸ் (எஸ் அண்டு பி) எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கு, மத்திய அரசு கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.தலைமை பொருளாதார ஆலோசகர் ரகுராம் ராஜன்: அன்னிய நிதி நிறுவனங்கள், நடப்பாண்டில், இதுவரை, 1,700 கோடி டாலர் அளவிற்கு இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்துள்ளன.
இந்தியாவை, நிலையான, நீடித்த, வலிமையான வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல, எத்தகைய நடவடிக்கைகள் தேவையோ, அதை மத்திய அரசு செய்து வருகிறது. தர நிர்ணய நிறுவனங்கள் கூறுவதற்கெல்லாம் பதில் அளித்துக் கொண்டிருப்பது நமது பணியல்ல. பொருளாதார விவகாரங்கள் துறை செயலர் அரவிந்த் மயாராம்: அரசு, நிதி நிலைமையை மீண்டும் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக, எஸ் அண்டு பி.,தெரிவித்துள்ளது. இதில் இருந்து, நிதி அமைச்சரின் நிதி சீர்திருத்த இலக்கின் நம்பகத் தன்மையை அந்நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. நிதிப்பற்றாக்குறை அதிகரித்துள்ள நிலையிலும், நாடு சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதை இது குறிக்கிறது.மிக விரைவான பொருளாதார முன்னேற்றம், மீண்டும் முதலீடுகளை அதிக அளவில் ஈர்ப்பதற்கான சூழலை உருவாக்குதல் ஆகியவை தான் தற்போதுள்ள பிரச்னை.
இவற்றுக்கு அரசியல் மட்டத்தில் ஒருமித்த ஆதரவு வேண்டும். இவை, அடுத்த ஒரு சில மாதங்களில் நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.கடந்த ஆண்டு, எஸ் அண்டு பி., இந்தியாவின் கடன் தகுதி மதிப்பீட்டை, குறைந்த அளவில் முதலீடு மேற்கொள்ளக்கூடிய பீ.பீ.பீ., மைனஸ் பிரிவிற்கு குறைத்தது.இந்நிலையில், அடுத்த ஓராண்டிற்குள்ளாக, இந்தியா, நிதி மற்றும் நடப்பு கணக்கு பற்றாக்குறையை எதிர்பார்த்த அளவிற்கு குறைக்க @வண்டும்.இல்லாவிடில், அதன் கடன் தகுதி மதிப்பீட்டை, இடர்பாடு மிக்க முதலீட்டை குறிக்கும் எதிர்மறை பிரிவிற்கு மாற்ற வாய்ப்புள்ளதாக, எஸ் அண்டு பி., எச்சரிக்கை விடுத்து உள்ளது.இதன்படி, தரக் குறியீடு குறைக்கப்பட்டால், இந்திய நிறுவனங்கள், அயல்நாடுகளில் வாங்கும் கடனுக்கு அதிக வட்டி செலுத்த நேரிடும்.- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)