பதிவு செய்த நாள்
20 மே2013
00:51
இந்தியா, நிதி சீர்திருத்த நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளத் தவறினால், அதன் கடன் தகுதி குறியீடு, மேலும் குறைக்கப்படும் என, தர நிர்ணய நிறுவனமான, ஸ்டாண்டர்ட் அண்டு பூர்ஸ் (எஸ் அண்டு பி) எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கு, மத்திய அரசு கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.தலைமை பொருளாதார ஆலோசகர் ரகுராம் ராஜன்: அன்னிய நிதி நிறுவனங்கள், நடப்பாண்டில், இதுவரை, 1,700 கோடி டாலர் அளவிற்கு இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்துள்ளன.
இந்தியாவை, நிலையான, நீடித்த, வலிமையான வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல, எத்தகைய நடவடிக்கைகள் தேவையோ, அதை மத்திய அரசு செய்து வருகிறது. தர நிர்ணய நிறுவனங்கள் கூறுவதற்கெல்லாம் பதில் அளித்துக் கொண்டிருப்பது நமது பணியல்ல. பொருளாதார விவகாரங்கள் துறை செயலர் அரவிந்த் மயாராம்: அரசு, நிதி நிலைமையை மீண்டும் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக, எஸ் அண்டு பி.,தெரிவித்துள்ளது. இதில் இருந்து, நிதி அமைச்சரின் நிதி சீர்திருத்த இலக்கின் நம்பகத் தன்மையை அந்நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. நிதிப்பற்றாக்குறை அதிகரித்துள்ள நிலையிலும், நாடு சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதை இது குறிக்கிறது.மிக விரைவான பொருளாதார முன்னேற்றம், மீண்டும் முதலீடுகளை அதிக அளவில் ஈர்ப்பதற்கான சூழலை உருவாக்குதல் ஆகியவை தான் தற்போதுள்ள பிரச்னை.
இவற்றுக்கு அரசியல் மட்டத்தில் ஒருமித்த ஆதரவு வேண்டும். இவை, அடுத்த ஒரு சில மாதங்களில் நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.கடந்த ஆண்டு, எஸ் அண்டு பி., இந்தியாவின் கடன் தகுதி மதிப்பீட்டை, குறைந்த அளவில் முதலீடு மேற்கொள்ளக்கூடிய பீ.பீ.பீ., மைனஸ் பிரிவிற்கு குறைத்தது.இந்நிலையில், அடுத்த ஓராண்டிற்குள்ளாக, இந்தியா, நிதி மற்றும் நடப்பு கணக்கு பற்றாக்குறையை எதிர்பார்த்த அளவிற்கு குறைக்க @வண்டும்.இல்லாவிடில், அதன் கடன் தகுதி மதிப்பீட்டை, இடர்பாடு மிக்க முதலீட்டை குறிக்கும் எதிர்மறை பிரிவிற்கு மாற்ற வாய்ப்புள்ளதாக, எஸ் அண்டு பி., எச்சரிக்கை விடுத்து உள்ளது.இதன்படி, தரக் குறியீடு குறைக்கப்பட்டால், இந்திய நிறுவனங்கள், அயல்நாடுகளில் வாங்கும் கடனுக்கு அதிக வட்டி செலுத்த நேரிடும்.- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|