எஸ் அண்டு பி எச்சரிக்கை: மத்திய அரசு அதிருப்திஎஸ் அண்டு பி எச்சரிக்கை: மத்திய அரசு அதிருப்தி ... விவசாயிகளின் மனுக்களைபரிசீலிக்காததால் ரூ.53 கோடி முடக்கம் விவசாயிகளின் மனுக்களைபரிசீலிக்காததால் ரூ.53 கோடி முடக்கம் ...
ஆறாவது பொருளாதார கணக்கெடுப்பு துவக்கம்:வருமானத்தை தெரிவிக்க அவசியமில்லை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மே
2013
00:52

ஈரோடு: தமிழகத்தில், ஆறாவது பொருளாதார கணக்கெடுப்பு துவக்கப்பட்டுள்ள நிலையில், தனிப்பட்ட மற்றும் நிறுவன வருமானத்தை தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை என, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.தேசிய புள்ளியல் துறை, புள்ளியியல் மற்றும் திட்டசெயலாக்க அமைச்சகத்தின் சார்பில், ஐந்தாண்டுக்கு ஒருமுறை தேசிய அளவில் மக்களின் பொருளாதார கணக்கெடுப்பை நடத்துகின்றன.
ஐந்தாவது பொருளாதார கணக்கெடுப்பு கடந்த, 2005 - 06ல் எடுக்கப்பட்டது. தற்போது, ஓராண்டு தாமதமாக, 2012 - 13ல், ஆறாவது பொருளாதார கணக்கெடுப்பை, கடந்த சில நாட்களுக்கு முன் துவங்கியுள்ளனர்.துணை பொருளாதார கணக்கெடுப்பு ஆணையராக கலெக்டரும், மாவட்ட புள்ளியல் துறை இணை இயக்குனர், உதவி பொருளாதார கணக்கெடுப்பு ஆணையராகவும் செயல்படுவர்.அவர்களுக்கு கீழ், தாசில்தார், நகராட்சி ஆணையர் உள்ளிட்ட தகுதியில் உள்ளோர், பொறுப்பு அலுவலர்களாகவும், களப்பணி மேற்பார்வையாளர், கணக்கெடுப்பாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிய முறைகள்:இந்த கணக்கெடுப்பில், புதிய முறைகள் கையாளப் படுகின்றன. வீடு மற்றும் நிறுவனங்கள் படிவம்- 6 ஏ, சுருக்கம்- 6 பி, எட்டு பேருக்கு மேல் பணிபுரியும் நிறுவனங்கள்- 6 சி ஆகிய படிவங்கள் மூலம் கணக்கெடுக்கப்படுகிறது.அதில், வேளாண் உற்பத்தி, கால்நடை, வனம் மற்றும் மரம் வெட்டுதல், மீன் பிடித்தல், கனிமம், சுரங்கம், இயந்திரம் பழுது பார்த்தல், மின்சாரம், எரிவாயு, குடிநீர், கழிவுநீர் மேலாண்மை, கட்டுமானம், மோட்டார் வாகனம், மொத்தம் மற்றும் சில்லரை வணிகம், போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம், நிதி மற்றும் காப்பீடு, வீடுமனை விற்பனை, கல்வி, கலை, கேளிக்கை, விளையாட்டு, தொழிற்சாலை, அரசு மற்றும் தனியார் அமைப்புகள் உள்ளிட்ட துறைகளில் பணியாற்றுபவர்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.வீடு மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும் நபர்களின், தனிப்பட்ட விவரங்கள், உரிமையாளர் விவரம், சமூகப்பிரிவு, மதம், முதன்மை நிதி ஆதாரம் ஆகிய விவரங்கள் மட்டும் சேகரிக்கப்படுகிறது.
எட்டு பேருக்கு மேல் பணியாற்றும் இடமாக இருந்தால், கடை மற்றும் வணிக நிறுவன சட்டம், சுங்கவரி மற்றும் வணிகவரி சட்டம், தொழிற்சாலைகள் சட்டம், சங்கங்களின் பதிவு, கூட்டுறவு சட்டம், கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் சட்டம், இதர சட்டப்பிரிவில் பதிவு செய்யப்படுகிறது. பொதுவான விவரங்கள் மட்டுமே சேகரிக்கப்படுகிறது.
பொருளாதார நிலை:இதுகுறித்து, புள்ளியியல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:நாட்டின் பொருளாதார நிலையை அறிந்து கொள்ள, ஐந்தாண்டுக்கு ஒருமுறை பொருளாதார கணக்குஎடுப்பு நடத்தப்படுகிறது. வீடு மற்றும் நிறுவனங்களில் பணியாற்றுபவரின் தொழில் ரீதியான தகவல்கள் மட்டுமே சேகரிக்கப்படும். அவர்களின் வருமானம், சம்பளம் ஆகிய விவரங்கள் கேட்கப்படமாட்டாது. ஜூன் மாதத்துக்குள் கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டு, மாநில புள்ளியல் துறையிடம் படிவங்கள் சமர்பிக்கப்படும், இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)