டாலருக்கு எதிரான ரூபாய்மதிப்பு ரூ.55.42 ஆக சரிவுடாலருக்கு எதிரான ரூபாய்மதிப்பு ரூ.55.42 ஆக சரிவு ... வருமான வரி துறை மேலும் 70 ஆயிரம் பேருக்கு "நோட்டீஸ்' வருமான வரி துறை மேலும் 70 ஆயிரம் பேருக்கு "நோட்டீஸ்' ...
அரசுஒப்புதல் இல்லாமல் கட்டப்பட்ட அடுக்கு மாடி வீடுகள்:ரூ.90 லட்சம் முடக்கம்; ரூ.20 லட்சத்துக்கு வட்டி இழப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மே
2013
00:18

அரசின் நிர்வாக ஒப்புதல் இல்லாமல், "வீட்டை சொந்தமாக்குங்கள்' திட்டத்தின் கீழ், போலீசாருக்கு அடுக்கு மாடி வீடுகள் கட்டியதால், 90 லட்சம் ரூபாய் முடங்கியதுடன், 20 லட்சம் ரூபாய்க்கு மேல், வட்டி இழப்பு ஏற்பட்டுள்ளதாக, தணிக்கைத் துறை குற்றம் சாட்டியுள்ளது.
வீட்டு வசதி:தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக் கழகம் மூலம், போலீசாருக்கான, "வீட்டை சொந்தமாக்குங்கள்' திட்டத்தின் கீழ், வீடுகள் கட்டிக் கொடுக்கப்படுகின்றன. இத் திட்டத்திற்கான நிதி, ஒதுக்கீட்டாளர்களுக்கு வழங்கப்படும் கடனாக, அரசால் வழங்கப் படுகிறது.வீட்டின் மொத்த விலைக்கும், ஒதுக்கீட்டாளர்களுக்கு வழங்கப்படும் கடன் தொகைக்கும் இடையிலான வித்தியாசத் தொகை, ஒதுக்கீட்டாளர்களிடம் இருந்து வைப்புத் தொகையாக வசூலிக்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ், சென்னையின் புறநகர் பகுதியான, திருமுல்லைவாயிலில், போலீசாருக்கு குடியிருப்புகள் கட்டுவதற்காக, அப்பகுதியில் உள்ள நன்கொடையாளரிடம் இருந்து, 1.17 ஏக்கர் நிலத்தை பெற்றுக் கொள்ள, 2000ம் ஆண்டு அரசு அனுமதித்தது. தொடர்ந்து, நிர்வாக ஒப்புதலை பெற்ற பின், நான்கு உயர் வருவாய் பிரிவு மற்றும், 10 மத்திய வருவாய் பிரிவிற்கான அடுக்குமாடி வீடுகளை கட்டுவதற்கு, 1.02 கோடி ரூபாய்க்கு நிதி ஒப்புதலை, 2006ம் ஆண்டு வழங்கியது.
தேர்வு:இதற்கான நிர்வாக ஒப்புதலை, வழங்கும்படி, அரசிடம், காவலர் வீட்டு வசதிக் கழகம் கோரியது.பொதுவாக, அரசின் நிர்வாக ஒப்புதல் மற்றும் பயனாளிகளை தேர்வு செய்து, வைப்புத் தொகை வசூலிக்கப்பட்ட பின்பு தான், திட்டப் பணிகள் துவக்கப்பட வேண்டும்.ஆனால், இத்திட்டத்தை, எந்த ஒப்புதலும் பெறாமல், 2007ம் ஆண்டு துவக்கி, 2009ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது.
அரசின் நிர்வாக ஒப்புதல் பெறப்படாததால், அடுக்குமாடி வீடுகள் இன்று வரை, ஒதுக்கீடு செய்யப்படாமல் உள்ளன. இதையடுத்து, தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு, காவலர் வீட்டு வசதிக் கழகத்திற்கு அரசு உத்தரவிட்டது.இந்நிலையில், கடந்தாண்டு, மத்திய தணிக்கைத்துறை, ஆய்வு நடத்தி, நிர்வாக ஒப்புதல் இல்லாமல், கட்டியதால், மூன்றாண்டுகளாக, 90.25 லட்சம் ரூபாய் முடங்கியிருப்பதாகவும், இதனால், 20.45 லட்சம் ரூபாய் வட்டி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
நோக்கம்:இதனால், இடம் பெறப்பட்ட நோக்கம் நிறைவேறவில்லை என்றும் தணிக்கை துறை தெரிவித்தது.இதுகுறித்து, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம், அரசிற்கு விவரம் தெரிவிக்கப்பட்ட நிலையில், இதுவரை பதில் பெறப்படவில்லை என்றும் தணிக்கை துறை கூறியுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)