பதிவு செய்த நாள்
23 மே2013
00:24
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், புதன்கிழமையன்றும் மிகவும் ஏற்ற, இறக்கமாகவே இருந்தது. இந்நிலையில், சில்லரை முதலீட்டாளர்கள், லாப நோக்கம் கருதி, அதிகளவில் பங்குகளை விற்பனை செய்ததை அடுத்து, "சென்செக்ஸ்', 0.25 சதவீதம் சரிவுடன் முடிவடைந்தது.
ஐரோப்பிய பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் மந்தமாகவே இருந்தது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. அதேசமயம், இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் காணப்பட்டது. குறிப்பாக, ஜப்பான் பங்குச் சந்தை குறியீட்டு எண், கடந்த ஐந்தரை ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, அதிகரித்து காணப்பட்டது.
நேற்றைய வியாபாரத்தில், பொறியியல், ரியல் எஸ்டேட், மின்சாரம், எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கை மாறின. அதேசமயம், ஆரோக்கிய பராமரிப்பு, நுகர் பொருட்கள் மற்றும் தகவல் தொழில் நுட்ப துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை காணப்பட்டது. இல்லையெனில், பங்கு வர்த்தகத்தில், பெரும் சரிவு ஏற்பட்டிருக்கும்.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 49.37 புள்ளிகள் சரிவடைந்து, 20,062.24 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 20,220.35 புள்ளிகள் வரையிலும், குறைந்த பட்சமாக, 20,000.86 புள்ளிகள் வரையிலும் சென்றது.
"சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், எல் அண்டு டி, டாட்டா பவர் உள்ளிட்ட, 16 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், சன் பார்மா, பார்தி ஏர்டெல், உள்ளிட்ட, 14 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி', 19.60 புள்ளிகள் குறைந்து, 6,094.50 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே, அதிகபட்சமாக, 6,147.60 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 6,074.45 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|