பதிவு செய்த நாள்
23 மே2013
23:55
சென்னை:நேற்று, தங்கம் விலை சவரனுக்கு, 64 ரூபாய் உயர்ந்து, 20,032 ரூபாய்க்கு விற்பனையானது. இதையடுத்து, ஒரு சவரன் தங்கம் விலை, மீண்டும், 20 ஆயிரம் ரூபாயை தாண்டியுள்ளது.கடந்த வாரம் முதல் குறைந்து வந்த தங்கம் விலை, நடப்பு வாரத்தில் மெல்ல மெல்ல அதிகரிக்க துவங்கியுள்ளது. சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரணத் தங்கம், ஒரு கிராம், 2,496 ரூபாய்க்கும், ஒரு சவரன், 19,968 ரூபாய்க்கும் விற்பனையானது.
கடந்த, 16ம் தேதி, ஒரு கிராம் தங்கம், 2,485 ரூபாய்க்கும், ஒரு சவரன், 19,880 ரூபாய்க்கும் விற்பனையானது. இந்நிலையில், நேற்று தங்கம் விலை கிராமுக்கு, 8 ரூபாய் அதிகரித்து, 2,504 ரூபாய்க்கு விற்பனையானது. சவர னுக்கு, 64 ரூபாய் உயர்ந்து, 20,032 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 24 காரட், 10 கிராம் சுத்த தங்கம், 80 ரூபாய் அதிகரித்து, 26,780 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதுகுறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி கூறும்போது, "அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பு வீழ்ச்சி கண்டு வருவதால், தங்கம் விலை அதிகரித்துள்ளது. ரூபாயின் வெளி மதிப்பு, நிலைபெறும் பட்சத்தில், தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளது' என்றார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|