பங்கு சந்தையில் கடும் வீழ்ச்சிபங்கு சந்தையில் கடும் வீழ்ச்சி ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.96  உயர்வு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.96 உயர்வு ...
லாபமற்ற சாகுபடியால் பருத்தி பயிரிடும் பரப்பளவில் தொடர் பின்னடைவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 மே
2013
00:11

வரும் ஜூன் மாதம் துவங்கும் கரீப் பருவத்தில், பருத்தி பயிரிடும் பரப்பளவு, சென்ற பருவத்தை விட, 10-15 சதவீதம் குறையும் என, இந்திய ஜவுளி ஆணையம் மதிப்பிட்டுள்ளது.பருத்தி சாகுபடியில், மகசூல் மற்றும் லாப வரம்பு மிக குறைவாக உள்ளதால், விவசாயிகள், மாற்றுப் பயிருக்கு மாறி வருகின்றனர். இதன் காரணமாக, பருத்தி பயிரிடும் பரப்பளவு, ஆண்டுக்காண்டு சுருங்கி வருகிறது.
நிலக்கடலை:கடந்த 2011-12ம் நிதியாண்டில்,பருத்தி சாகுபடி பரப்பளவு,1.28 கோடி ஹெக்டேராக இருந்தது. இது, உத்தேச மதிப்பீட்டின்படி,சென்ற 2012-13ம் நிதியாண்டில்,1.18 கோடி ஹெக்டேராக குறைந்து உள்ளது. "நடப்பு ஆண்டில், விவசாயிகள் நிலக்கடலை பயிருக்கு மாறி வருவதால், பருத்தி பயிரிடும் பரப்பளவு மேலும் குறையும்' என, குஜராத் மாநில கூட்டுறவு பருத்தி கூட்டமைப்பின் நிர்வாக இயக்குனர், என்.எம்.சர்மா தெரிவித்தார்.
கடந்த ஆண்டு, பருவ மழை தவறியதால், பருத்தி பயிரிடும் பரப்பளவு குறைந்தது. மேலும், கடந்த ஆண்டை விட, நடப்பு ஆண்டில், பருத்திக்கு குறைவான விலையே கிடைப்பதால், விவசாயிகளுக்கு பருத்தி சாகுபடியில் ஆர்வம் குறைந்துள்ளது என, அவர் மேலும் கூறினார்.பருத்தியின் குறைந்தபட்ச ஆதரவு விலையை விட, வெளிச்சந்தையில் அதன் விலை குறைவாக உள்ளதும், விவசாயிகளை இதர பயிர் சாகுபடியில் ஈடுபடத் தூண்டியுள்ளது. அகம தாபாத்தை சேர்ந்த பருத்தி வல்லுனர் அருண் தலால், கூறியதாவது:
விவசாயிகள்,20 கிலோ கச்சா பருத்திக்கு,1,000 ரூபாய் கிடைக்கும் என்று எதிர் பார்க்கின்றனர். ஆனால், 720 - 780 ரூபாய் வரையே கிடைக்கிறது.ஆந்திராவில்,தற்போது, ஒரு குவிண்டால் பருத்தி,3,900 ரூபாய்க்குவிற்கப்படு கிறது. இது, கடந்த 20 நாட்களுக்கு முன்பு, குறைந்தபட்ச ஆதரவு விலையை விட, குவிண்டாலுக்கு 400 - 500 ரூபாய் வரை குறைவாக இருந்தது.இவ்வாறு அவர் கூறினார்.
ஏற்றுமதி:சர்வதேச பொருளாதார மந்தநிலையால், பருத்தி ஏற்றுமதியும் பாதிக்கப் பட்டுள்ளது. இந்தியாவின் பருத்தி ஏற்றுமதியில், சீனாவின் பங்களிப்பு, 60 சதவீதமாக இருந்தது. இந்நிலையில், சீன அரசின் அதிரடி உத்தரவால், அந் நாட்டின் ஜவுளி நிறுவனங்கள்,இந்தியாவில் இருந்து பருத்தி இறக்குமதி செய்வதை அடியோடு நிறுத்தி விட்டன. இந்திய பருத்தியை இறக்குமதி செய்தால்,அத்தொகையை போல்,மூன்று மடங்கிற்கு,சீன அரசு அமைப்பிடம் இருந்து பருத்தியை வாங்க வேண்டும் என்ற உத்தரவு தான் இதற்கு காரணம்.
இந்திய பருத்தி ஏற்றுமதியில், இரண்டாவது நாடாக உள்ள வங்கதேசமும், அதன் பருத்தி இறக்குமதியை குறைத்துக் கொண்டுள்ளது. பாகிஸ்தானும், ஆஸ்திரேலியா மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் இருந்து, குறைந்த விலையில் கிடைக் கும் பருத்தியை, இறக்குமதி செய்யத் துவங்கி உள்ளது.உள்நாட்டிலும், ஜவுளி ஆலைகளின் பருத்தி தேவை, கடந்த ஆண்டை விட, நடப்பாண்டு குறைந்துள்ளது. இதனால், சந்தையில் இருப்பு அதிகரித்து, அதன் விலை சரிவடைந்து உள்ளது.
வரும் கரீப் பருவ வேளாண்மைக்கு, பருத்தி விதை வாங்குவதற்காக, விவசாயிகள், வேறு வழியின்றி தங்களிடம் உள்ள பருத்தியை, குறைந்தபட்சஆதரவு விலையை விட, குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதையடுத்து, இந்திய பருத்தி கழகமும்,தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பும் இணைந்து, ஆந்திரா மற்றும் மகாராஷ்டிராவில், பருத்தியை கொள்முதல் செய்யத் துவங்கியுள்ளன.
குஜராத்:இதனால், அம்மாநிலங்களில் கச்சா பருத்தி விலை சற்று அதிகரித்துள்ளது. ஆனால், குஜராத்தில் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்படாததால், அங்குள்ள விவசாயிகள், குறைந்தபட்ச ஆதரவு விலையை விட, குறைந்த விலைக்கு பருத்தியை விற்பனை செய்து வருகின்றனர்.இது தவிர, சர்வதேச சந்தையில், குறைந்த விலையில் கிடைக்கும் பருத்தியை, உள்நாட்டு ஜவுளி நிறுவனங்கள் இறக்குமதி செய்து வருகின்றன. இப்படிப்பட்ட சூழல் காரணமாக, ஒட்டுமொத்த அளவில், பருத்தி சாகுபடியில், விவசாயி களின் ஆர்வம் குறைந்துள்ளது. இதன் தாக்கம், வரும் கரீப் பருவ பருத்தி பயிரிடும் பரப்பளவில் தெரியவரும் என, வேளாண் வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர்.
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)