நிதி அமைச்சகம் ரூ.1 லட்சம் கோடிஎரிபொருள் மானியம் வழங்க ஒப்புதல்நிதி அமைச்சகம் ரூ.1 லட்சம் கோடிஎரிபொருள் மானியம் வழங்க ஒப்புதல் ... லாபமற்ற சாகுபடியால் பருத்தி பயிரிடும் பரப்பளவில் தொடர் பின்னடைவு லாபமற்ற சாகுபடியால் பருத்தி பயிரிடும் பரப்பளவில் தொடர் பின்னடைவு ...
பங்கு சந்தையில் கடும் வீழ்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 மே
2013
00:05

மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், தொடர்ந்து 4-வது நாளாக, வியாழக்கிழமையன்றும் கடும் வீழ்ச்சி கண்டது. சாதகமற்ற சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரங்களால், "சென்செக்ஸ்' 1.93 சதவீதம் சரிவுடன் முடிவடைந்தது.
கடன்பத்திரங்களை திரும்ப பெறும் திட்டம் முடிவுக்கு வர உள்ளது என்ற அமெரிக்க, மத்திய வங்கியின் தலைவர் பென் பெர்னகியின் சூசக தகவலால், உலக நாடுகளின் பங்குச் சந்தைகள் ஆட்டம் கண்டன.குறிப்பாக, ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மிகவும் சுணக்கம் கண்டது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.
நேற்றைய வியாபாரத்தில், ரியல் எஸ்டேட், பொறியியல், வங்கி, மின்சாரம் @பான்ற துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்து போனது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 387.91 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 19,674.33 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 20,027.56 புள்ளிகள் வரையிலும், குறைந்த பட்சமாக, 19,634.79 புள்ளிகள் வரையிலும் சென்றது.
"சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், எச்.டீ.எப்.சி., மற்றும் சன்பார்மா ஆகிய இரண்டு நிறுவ னங்கள் தவிர, ஏனைய, 28 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்து காணப்பட்டது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி', 127.45 புள்ளிகள் சரிவடைந்து, 5,967.05 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்த கத்தின் இடையே, அதிகபட்சமாக, 6,081.45 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,955.70 புள்ளிகள் வரையிலும் சென்றது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)