பதிவு செய்த நாள்
24 மே2013
00:05
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், தொடர்ந்து 4-வது நாளாக, வியாழக்கிழமையன்றும் கடும் வீழ்ச்சி கண்டது. சாதகமற்ற சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரங்களால், "சென்செக்ஸ்' 1.93 சதவீதம் சரிவுடன் முடிவடைந்தது.
கடன்பத்திரங்களை திரும்ப பெறும் திட்டம் முடிவுக்கு வர உள்ளது என்ற அமெரிக்க, மத்திய வங்கியின் தலைவர் பென் பெர்னகியின் சூசக தகவலால், உலக நாடுகளின் பங்குச் சந்தைகள் ஆட்டம் கண்டன.குறிப்பாக, ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மிகவும் சுணக்கம் கண்டது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.
நேற்றைய வியாபாரத்தில், ரியல் எஸ்டேட், பொறியியல், வங்கி, மின்சாரம் @பான்ற துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்து போனது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 387.91 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 19,674.33 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 20,027.56 புள்ளிகள் வரையிலும், குறைந்த பட்சமாக, 19,634.79 புள்ளிகள் வரையிலும் சென்றது.
"சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், எச்.டீ.எப்.சி., மற்றும் சன்பார்மா ஆகிய இரண்டு நிறுவ னங்கள் தவிர, ஏனைய, 28 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்து காணப்பட்டது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி', 127.45 புள்ளிகள் சரிவடைந்து, 5,967.05 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்த கத்தின் இடையே, அதிகபட்சமாக, 6,081.45 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,955.70 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|