தங்கம் விலை சவரனுக்கு ரூ.16  உயர்வு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.16 உயர்வு ... நாட்டின் அன்னிய செலாவணிகையிருப்பு 172 கோடி டாலர் சரிவு நாட்டின் அன்னிய செலாவணிகையிருப்பு 172 கோடி டாலர் சரிவு ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
தங்கம் கடத்துவது 40 சதவீதம் அதிகரிக்கும்:சுங்கம் உள்ளிட்ட பல்வேறு வரி உயர்வால்...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மே
2013
00:42

நடப்பாண்டு, வெளிநாடுகளில் இருந்து, நம் நாட்டிற்கு, சட்டவிரோதமாக தங்கம் கடத்துவது, 40 சதவீதம் அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. தங்கம் இறக்குமதிக்கான சுங்க வரி, ஆபரண உற்பத்தி வரி, விற்பனை வரி என, பல்வேறு வரிகள் உயர்த்தப்பட்டுள்ளன.இதனால், வெளிநாடுகளில் குறைந்த விலையில் கிடைக்கும் தங்கத்தை, சட்டவிரோதமாக, இந்தியாவிற்கு கடத்தி வந்து, அதிக விலைக்கு (உள்நாட்டு விலையை விட குறைவாக) விற்பது லாபகரமானதாக கருதப்படுகிறது.
பறிமுதல்:கடந்த 2012ம் ஆண்டு, இந்தியா, ஒட்டுமொத்த அளவில், இறக்குமதி செய்த தங்கத்தில், 10 சதவீதம், அதாவது, 102 டன் தங்கம், அதிகாரபூர்வமற்ற வழிகளில் வந்து உள்ளது. இது, தாம்சன் ராய்ட்டர்ஸ் ஜி.எப்.எம்.எஸ்., நிறுவனத்தின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நடப்பாண்டில், 140 டன் தங்கம், முறையற்ற வழியில் இந்தியாவிற்குள் கடத்தி வர வாய்ப்புஉள்ளதாக, ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சுங்க அதிகாரிகள், சட்ட விரோத கடத்தல் தங்கத்தை கண்டுபிடிப்பதும், பறிமுதல் செய்வதும், சொற்ப அளவில் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கச்சா எண்ணெய் மற்றும் தங்கம் இறக்குமதியால் நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை, வரலாறு காணாத வகையில் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்தும் நோக்கில், மத்திய அரசு, கடந்த ஆண்டு, தங்கம் மீதான இறக்குமதி வரியை இரண்டு தவணைகளில், 4 சதவீதமாக உயர்த்தியது. பின்னர் இது, 6 சதவீதமாக உயர்த்தப்பட்டது. ஒரு சதவீத மதிப்பு கூட்டு வரியும் விதிக்கப்பட்டது.மேலும், சர்வதேச விலை அடிப்படையில், தங்கத்தின் மதிப்பை நிர்ணயித்து, அதற்கு தகுந்தவாறு வரி வசூலிக்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டது.
இறக்குமதி செலவினம் :இது @பான்ற நடவடிக்கையால், தங்கம் இறக்குமதி செலவினம் அதிகரித்துள்ளது. இதை சாதகமாக்கி, தங்கம் கடத்துவது அதிகரித்து வருகிறது.அண்மையில், ரிசர்வ் வங்கி, தங்க நகை ஏற்றுமதியாளர்களின் உண்மையான தேவைக்கேற்ப மட்டு@ம, வங்கிகள் தங்கத்தை, ரொக்கத்திற்கு
இறக்குமதி செய்ய வேண்டும் என, உத்தரவிட்டது.இதனால், ஊகத்தின் அடிப்படையில் தங்கம் இறக்குமதி செய்வது கிட்டத்தட்ட நின்று விட்டது. இதற்கு முன்னர், தாராளமாக இறக்குமதி செய்யப்பட்ட தங்கம், கூடுதல் விலைக்கு கைமாறி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து, இந்திய நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர், பச்ராஜ் பமல்வா கூறும்போது, "தற்போது, சிறிய நகை வியாபாரிகள், 10 கிராம் தங்கத்தை, 500 - 600 ரூபாய் கூடுதல் விலையில் வாங்கி வருகின்றனர். அப்படி இருந்தும் தங்கம் கிடைப்பது கடினமாக உள்ளது' என்று தெரிவித்தார்.
இறக்குமதி வரி, மதிப்பு கூட்டு வரி, உடனடி டெலிவரிக்கு கூடுதல் விலை @பான்றவை காரணமாக@வ, தங்கம் கடத்துவது அதிகரித்துள்ளது என, அவர் @மலும் கூறினார்.கட்டுப்பாடுகள்:கடந்த, 14 ஆண்டுகளுக்கு முன்பு, தங்கம் மீதான வர்த்தகத்தில் இருந்த கட்டுப்பாடுகள் அடி@யாடு தளர்த்தப்பட்டன. தங்கம் இறக்குமதி செய்ய, @தர்ந்தெடுக்கப்பட்ட முகமை அமைப்புகள் அனுமதிக்கப்பட்டன. இத்தகைய செயல்பாடுகளால், கடந்த 2011ம் ஆண்டு வரை, தங்கம் கடத்துவது வெகுவாக குறைந்து இருந்தது.கடந்த 2012ம் ஆண்டில் இருந்து, தங்கம் கடத்துவது அதிகரித்து உள்ளது. அதிகாரபூர்வமற்ற முறையில் நடைபெறும், இத்தகைய கடத்தலில், 500 கோடி டாலர் அளவிற்கு, ஹவாலா முறையில் பணப் பரிவர்த்தனை நடைபெறுகிறது.
ரிசர்வ் வங்கி:ரிசர்வ் வங்கியின் உத்தரவை அடுத்து, @தவைப்படும் தங்கத்திற்கு மட்டுமே, நகை வியாபாரிகள், "ஆர்டர்' வழங்க துவங்கியுள்ளனர். முகமை அமைப்புகளும், தங்கத்தை தாராளமாக இறக்குமதி செய்து, அவை விற்ற பிறகு பணம் தரும் போக்கை கைவிட்டு உள்ளன. நகை வியாபாரிகளின் "ஆர்டர்' அடிப்படையில், மொத்தமாக, ரொக்கத்தில் தங்கத்தை இறக்குமதி செய்ய தலைப்பட்டுள்ளன.இதனால், வரும் மாதங்களில், தங்கம் இறக்குமதி கட்டுக்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், மத்திய அரசு, வரி குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே, தங்கம் கடத்துவது வெகுவாக குறையும் என, இத்துறை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)