பதிவு செய்த நாள்
29 மே2013
00:58
புதுடில்லி:நடப்பு, 2013-14ம் நிதியாண்டில், நேரடி வரி வருவாய், சென்ற நிதியாண்டை விட, 19 சதவீதம் அதிகரித்து, 6.68 லட்சம் கோடி ரூபாயாக உயரும் என, மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர், பூனம் கிஷோர் சக்சேனா தெரிவித்தார்.டில்லியில் நடைபெற்ற கருத்தரங்கில், அவர் மேலும் கூறியதாவது:வருமான வரித் துறையை சீரமைத்துள்ளோம். புதிய அணி, புதுப்பொலிவு பெற்ற ஊழியர்களுடன் இணைந்து, எதிர்பார்ப்புக்கு ஏற்ப பணியாற்றும். புதிய கட்டமைப்பில் உள்ளோர், அதிக திறனுடன் தம் பொறுப்புகளை நிறைவேற்றுவார்கள். மூத்த அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு உள்ளது. அவர்கள் அதற்கேற்ப கடமையாற்றுவார்கள். கடந்த நிதியாண்டு சோதனை மிகுந்ததாக காணப்பட்டது.குறைந்த வசதிகளுடன், இலக்கை எட்டுவது என்பது சவாலாக இருந்தது. இந்த நிலையிலும், நேரடி வரி வசூல், 5.59 லட்சம் கோடி ரூபாயை எட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.வருமான வரித் துறை, தேசத்துடன் இணைந்து, மத்திய அரசுக்கு அதிக அளவில் வருவாயை ஈட்டித் தரும் துறையாக உருவெடுத்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|