பதிவு செய்த நாள்
29 மே2013
09:32
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் மூன்றாம் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் (09.12 மணியளவின்) போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 41.69 புள்ளிகள் அதிகரித்து 20202.51 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 9.20 புள்ளிகள் அதிகரித்து 6120.45 புள்ளிகளோடு காணப் பட்டது. பங்கு வர்த்தகம், நேற்றும் நன்கு இருந்தது. சர்வதேச நிலவரங்கள் மற்றும் முன்னணி நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் சாதகமாக இருந்ததையடுத்து, பங்குச் சந்தைகளில் வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது.குறிப்பாக, சென்ற நிதியாண்டின் நான்காவது காலாண்டில், பொதுத் துறையைச் சேர்ந்த, கோல் இந்தியா நிறுவனத்தின் நிகர லாபம், சந்தை மதிப்பீடுகளை தாண்டி சிறப்பாக அதிகரித்துள்ளது. இதையடுத்து, இந்நிறுவனப் பங்கின் விலை, 3.1 சதவீதம் அதிகரித்தது. மேலும், சில்லரை முதலீட்டாளர்கள், அதிகளவில் பங்குகளில் முதலீடு மேற்கொண்டதையடுத்து, இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்தன.ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் பேங்க் ஆப் ஜப்பான் ஆகியவை, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க ஏதுவாக, நிதிக் கொள்கை குறித்த முடிவுகளை தாராளமாக அறிவிக்க உள்ளன என்ற செய்தியால், ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறப்பாக இருந்தது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|