பதிவு செய்த நாள்
31 மே2013
00:26
சென்னை: மஞ்சள் விலை, வரும் ஜூன் மாதம், மத்தியில் இருந்து உயர வா#ப்புள்ளதாக, வியாபாரிகள் தெரிவித்தனர். ஈரோடு மஞ்சள் சந்தைக்கு, ஆந்திராவில் இருந்து தரம் குறைந்த, மலிவு விலை மஞ்சளின் வரத்து அதிகரித்து உள்ளது. அதே சமயம், கடந்த ஒரு மாதமாக, இதர மாநிலங்களில் இருந்து, மொத்த வியாபாரிகளின் மஞ்சள் கொள்முதல் குறைந்துள்ளது.பண்டிகை காலம் வர உள்ளதால், வரும் ஜூன் மாதம் மத்தியில் இருந்து, மஞ்சளுக்கான தேவை அதிகரிக்கும். இதையடுத்து, வெளிமாநிலங்களில் இருந்து மஞ்சளுக்கான ஆர்டர் அதிகம் வரும் என்பதனால், அதன் விலையும் உயரும் என, மஞ்சள் வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.முன்பேர சந்தையில் ஒரு குவிண்டால் மஞ்சள் விலை, 6,200 ரூபாயாக சரிவடைந்துள்ளது. ஈரோடு சந்தையில், ஒரு குவிண்டால் விரலி மஞ்சள், 4,299 - 7,041 ரூபாய் வரை விற்பனையாகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|