பதிவு செய்த நாள்
04 ஜூன்2013
23:35
மும்பை:நாட்டின் முன்னணி வங்கி சாரா நிதி நிறுவனங்கள், 150 கோடி ரூபாய் அளவிற்கு, சேவை வரி மோசடி செய் துள்ளதை, வருமான வரி துறை கண்டுபிடித்து உள்ளது.தங்கம், வாகனம், வீட்டு வசதிக் கடன்களை வழங்கி வரும் இந்நிறுவனங்களுக்கு, சென்னை, கேரளா, மும்பை, கோல்கட்டா ஆகிய நகரங்களில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன.
வங்கி சாரா நிதி நிறுவனங்கள், அவற்றின் பல்வகை கடன்களை, முன்னணி தனியார் வங்கிகள் மற்றும் இதர நிதி நிறு வனங்களிடம், ஆவண வடிவில் விற்பனை செய்கின்றன.அதே சமயம், அக்கடன்களை திரும்ப செலுத்துதல், நிர்வ கித்தல் தொடர்பான ஆவண பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கு, சேவைக் கட்டணமாக குறிப்பிட்ட தொகையை, வங்கி சாரா நிதி நிறுவனங்கள், வங்கிகளிடம் இருந்து பெறுகின்றன.
இத்தொகைக்கு, 12.36 சதவீத சேவை வரியை, வங்கி சாரா நிதி நிறுவனங்கள், செலுத்த வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாமல், அதாவது,சேவை கட்டணத்தை தனியே கட்டாமல், மொத்த தொகையில் சேர்த்து, வரி ஏய்ப்பு செய்துள் ளன.இந்த வகையில், ஒன்பது நிறுவனங்கள், கடந்த ஐந்து ஆண்டுகளாக, 150 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வரி ஏய்ப்பு செய்துள்ளது, முதற்கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது என, வருமான வரித் துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித் தார்.
வரி ஏய்ப்பு செய்த நிறுவனங்களுள், மும்பை மற்றும் கேரளாவை சேர்ந்த இரு நிறுவனங்கள், 22 கோடி ரூபாயை ஏற்கனவே செலுத்தி விட்டதாகவும், எஞ்சிய தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, அவர் மேலும் கூறினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|