தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 குறைவு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 குறைவு ... நாட்டின் தங்கம் இறக்குமதி1,500 கோடி டாலராக உயர்வு நாட்டின் தங்கம் இறக்குமதி1,500 கோடி டாலராக உயர்வு ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
"உள்நாட்டில் பருத்தி சாகுபடி பரப்பு குறையாது'
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜூன்
2013
00:01

நடப்பாண்டில், பருவமழை நன்கு இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. மதிப்பீட்டிற்கு ஏற்ப, தென்மேற்கு பருவமழை பெய்யத் துவங்கியுள்ளது. இதன் காரணமாக, வரும், 2013-14ம் பருவத்தில் (அக்.,-செப்.,), உள்நாட்டில், பருத்தி சாகுபடி செய்யும் பரப்பளவு குறைய வாய்ப்பில்லை என, பருத்தி ஆலோசனை கழகம் தெரிவித்துள்ளது.
உற்பத்தி:நடப்பு, 2012-13ம் பருவத்தில், பருத்தி சாகுபடி செய்யும் பரப்பளவு, 1.18 கோடி ஹெக்டேராக உள்ளது. அதே சமயம், கடந்த, 2011-12ம் பருவத்தில், இதன் சாகுபடி பரப்பளவு, 1.22 கோடி ஹெக்டேராக இருந்தது.இந்நிலையில், பருவமழை நன்கு இருக்கும் என்ற மதிப்பீட்டால், வரும் பருவத்தில், இதன் சாகுபடி பரப்பளவு, நடப்பு பருவத்தை போன்றே இருக்கும். இதை விட, குறைய வாய்ப்பில்லை என, தெரிகிறது.
கடந்த, 2011-12ம் பருவத்தில், உள்நாட்டில் பருத்தி உற்பத்தி, 3.53 கோடி பொதிகளாக (ஒரு பொதி=170 கிலோ) இருந்தது. இது, நடப்பு, 2012-13ம் பருவத்தில், 3.34 கோடி பொதிகளாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.இதுகுறித்து, இந்திய ஜவுளி ஆலைகள் கூட்டமைப்பின் தலைமை இயக்குனர் டீ.கே. நாயர் கூறியதாவது:வரும், 2013-14ம் பருவத்தில், நாடு தழுவிய அளவில், பருவமழை நன்கு இருக்குமென, எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, வரும் பருவத்தில், பருத்தி சாகுபடி பரப்பளவு குறைய வாய்ப்பில்லை. இருப்பினும், தற்போதைய நிலையில், சாகுபடி பரப்பளவு எப்படி இருக்கும் என்பது குறித்து, இப்போதே முடிவு செய்ய இயலாது. இவ்வாறு, நாயர் கூறினார்.கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பாக, உள்நாட்டில் பருத்தியின் விலை சரிவடைந்திருந்தது. இதனால், பல விவசாயிகள் பருத்தி சாகுபடியில், அதிக கவனம் செலுத்தாமல் இருந்தனர்.
இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில், ஒரு குவிண்டால், பருத்தியின் விலை, 4,650 ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக, ஆந்திர மாநிலத்தில், இதன் விலை, குறைந்தபட்ச ஆதரவு விலையான, 3,900 ரூபாயை விட, மிகவும் குறைந்திருந்தது.
குஜராத்:தற்போது, இதன் விலை அதிகரித்து உள்ளதால், இம்மாநிலத்தில், பருத்தி சாகுபடி பரப்பளவு உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.குஜராத் மாநிலத்திலும், ஒரு குவிண்டால் பருத்தியின் விலை, தற்போது, குறைந்த பட்ச ஆதரவு விலையான,3,900 ரூபாயை விட, அதாவது, 4,750 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. முன் பேர வர்த்தக சந்தைகளிலும், பருத்தியின் விலை அதிகரித்துள்ளது. இது போன்ற காரணங்களால், வரும், 2013-14ம் பருவத்தில், பருத்தி சாகுபடி பரப்பளவும், உற்பத்தியும் நிலையாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)