பதிவு செய்த நாள்
06 ஜூன்2013
00:02
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், புதன்கிழமையன்று ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், முன்னணி நிறுவனப் பங்குகளின் விலை குறைந்திருந்ததை சாதகமாக பயன்படுத்தி, முதலீட்டாளர்கள், முதலீடு மேற்கொண்டதை அடுத்து, இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்தன.
ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சுணக்கமாக இருந்தது. நேற்றைய வியாபாரத்தில், எண்ணெய், எரிவாயு, ரியல் எஸ்டேட், உலோகம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை காணப்பட்டது. அதேசமயம், நுகர்பொருட்கள், தகவல் தொழில்நுட்பம், நுகர்வோர் சாதனங்கள் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 22.44 புள்ளிகள் அதிகரித்து, 19,568.22 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 19,604.43 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 19,441.35 புள்ளிகள் வரையிலும் சென்றது.
"சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், ரிலையன்ஸ், ஓ.என்.ஜி.சி., சன்பார்மா உள்ளிட்ட, 18 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், இன்போசிஸ், ஐ.டி.சி., விப்ரோ உள்ளிட்ட, 12 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி', 4.40 புள்ளிகள் உயர்ந்து, 5,923.85 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,935.20 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,883.70 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|