பதிவு செய்த நாள்
07 ஜூன்2013
00:24
மும்பை:தங்கம் வாங்க, வாடிக்கையாளர்களை ஊக்குவிக்க வேண்டாம் என, வங்கிகளுக்கு, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.மத்திய அர”, தங்கத்தின் இறக்குமதியை கட்டுப்படுத்தும் நோக்கில், நேற்று முன்தினம் இரவு, அதன் மீதான ”ங்க வரியை, 6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக திடீரென்று உயர்த்தியது.
”ங்க வரி:கடந்த ஆறு மாதங்களில், இரண்டாவது முறையாக, தங்கம் மீதான ”ங்க வரி, உயர்த்தப்பட்டுள்ளது.அதிகரித்து வரும், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைக்கும் நோக்குடன், மத்திய அர” இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.இதுகுறித்து, மும்பையில் நடைபெற்ற, இந்திய வங்கிகள் கூட்டமைப்பின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் ப.சிதம்பரம் பேசியதாவது:
நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையை அதிகரிப்பதில், தங்கத்தின் இறக்குமதி பெரும் பங்கு வகிக்கிறது. தங்கம் விலை வீழ்ச்சி, லட்சக்கணக்கானோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த லட்சக்கணக்கானோரில் நான் இல்லை. சர்வதேச சந்தையில், தங்கம் விலை குறைந்தது, இந்தியாவிற்கு நல்ல செய்தி அல்ல என, நான், ரிசர்வ் வங்கி கவர்னரிடம் கூறினேன். நாம் அச்சப்பட்ட படியே நடந்து விட்டது.
சர்வதேச சந்தையில், தங்கம் விலை வீழ்ச்சி கண்டதால், ஏப்ரல், மே மாதங்களில், அதன் இறக்குமதி அதிகரித்துள் ளது.சென்ற ஏப்ரலில், 142 டன்னும், மே மாதம், 162 டன் தங்கமும் இறக்குமதி ஆகியுள்ளது. கடந்த ஆண்டு, மாதாந்திர தங்கம் இறக்குமதி, சராசரியாக, 70 டன்னாக இருந்தது.
மோகம்:இது, நடப்பு நிதியாண்டின் முதல் இரண்டு மாதங்களில், சராசரியாக, 152 டன்னாக அதிகரித்துள்ளது.மக்களிடம் தங்கத்தின் மீதான மோகத்தை குறைக்கும் நடவடிக்கைகளில், வங்கிகளுக்கும் பங்கு உள்ளது. வாடிக்கையாளர்களை, தங்கத்தில் முதலீடு செய்யவோ அல்லது தங்கம் வாங்கவோ ஊக்குவிக்க கூடாது என, அனைத்து வங்கிகளும், அவற்றின் கிளைகளுக்கு ஆலோசனை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். ஏற்கனவே, தங்க நாணயங்களை விற்க வேண்டாம் என்று வங்கிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கம் என்பது, தாமிரம் அல்லது வெண்கலத்தை விட, சற்று மினு மினுப்பு அதிகம் உள்ள உலோகம், அவ்வளவு தான். இதர உலோகங்களை போன்றது தான் தங்கம் என, நாம் கருதும் நாள் வரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இவ்வாறு சிதம்பரம் தெரிவித்தார்.இதனிடையே, தங்கம் மீதான ”ங்க வரி உயர்வால், எந்த பயனும் இருக்காது என்றும், அதன் விலை உயர்வுக்கு தான் வழி வகுக்கும் என்றும், உலக தங்க கவுன்சில் (இந்தியா) நிர்வாக இயக்குனர் சோம”ந்தரம் தெரிவித்துள்ளார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|