நாட்டின் உருக்கு பயன்பாடு1.17 கோடி டன்னாக குறைவுநாட்டின் உருக்கு பயன்பாடு1.17 கோடி டன்னாக குறைவு ... தங்கம் விலையில் சரிவு! சவரனுக்கு ரூ.328 குறைந்தது தங்கம் விலையில் சரிவு! சவரனுக்கு ரூ.328 குறைந்தது ...
சம்பளம் கொடுக்க என்னிடம் பணம் இல்லை': விஜய் மல்லைய்யா கைவிரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜூன்
2013
10:42

மும்பை: சம்பள பாக்கி கேட்டு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள, "கிங்பிஷர் ஏர்லைன்ஸ்' நிறுவன ஊழியர்களிடம், "தன்னால் பணம் வழங்க முடியாது' என, அதன் தலைவர் விஜய் மல்லைய்யா தெரிவித்தார்.

கடன் பிரச்னையால், நொடித்து போய் உள்ள, "கிங்பிஷர் ஏர்லைன்ஸ்' நிறுவனத்தின் விமான சேவை முடக்கப்பட்டுள்ளது. இதில் பணியாற்றிய ஊழியர்களுக்கு, கடந்த ஆண்டு, ஆகஸ்ட் மாதம் முதல், சம்பளம் வழங்கப்படவில்லை. இந்நிறுவனத்தின் தலைவரான, தொழில் அதிபர் விஜய் மல்லைய்யாவுக்கு, பிரபல மதுபான நிறுவனமான, யுனைடெட் ஸ்பிரிட்சில், பங்குகள் உள்ளன. இதை, பிரிட்டனின் மிகப் பிரபலமான, ஸ்மிர்நாப், ஜானி வாக்கர் போன்ற, "பிராண்டு'களில், ஓட்கா, விஸ்கி உட்பட பல, மதுபானங்களைத் தயாரிக்கும் டியாஜியோ என்ற நிறுவனத்துக்கு விற்க, விஜய் மல்லைய்யா ஒப்பந்தம் செய்தார். இதன் மூலம், 11,166 கோடி ரூபாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், விஜய் மல்லைய்யாவுக்கு உள்ள பங்கு மட்டும், 5,742 கோடி ரூபாய். இருப்பினும், இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்கு, கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கும் பணத்தில், தங்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என, கிங்பிஷர் ஏர்லைன்ஸ் ஊழியர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், முடியாமல் போனதால், நேற்று முன் தினம் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினர்.

இந்நிலையில், நேற்று போராட்டம் நடத்திய ஊழியர்களின் பிரதிநிதிகள், விஜய் மல்லைய்யாவை சந்தித்து, பேச்சு நடத்தினர். அவர்களிடம், ""சம்பள பாக்கியை கொடுப்பதற்கு,என்னிடம் பணம் இல்லை,'' என, விஜய் மல்லைய்யா உறுதிபட தெரிவித்துள்ளார். இதையடுத்து, போராட்டத்தை தொடர்ந்து நடத்த, ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)