பதிவு செய்த நாள்
10 ஜூன்2013
00:59
மும்பை:சென்ற ஏப்ரலில், பல்வேறு நிறுவனங்கள், கடன் பத்திரங்களை வெளியிட்டு, நிதி திரட்டுவது, 90 சதவீதம் குறைந்து, 134 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது.இது, இதற்கு முந்தைய மார்ச் மாதத்தில், 1,368 கோடி ரூபாயாக உயர்ந்து இருந்தது.கடந்த ஏப்ரலில், பங்குச் சந்தையில் காணப்பட்ட ஏற்ற, இறக்கம் காரணமாக, இந்த சரிவு ஏற்பட்டுள்ளதாக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், நிறுவனங்கள் பங்கு வெளியீடுகளை மேற்கொள்ளாமல், கடன் பத்திரங்களை மட்டுமே வெளியிட்டதாலும், மூலதனச் சந்தையில், ஒட்டுமொத்த அளவில் நிதி திரட்டுவது, குறைந்துள்ளது.சென்ற, 2012-13ம் நிதியாண்டின், மார்ச் மாதத்தில், மூலதனச் சந்தையில், பங்கு வெளியீடு வாயிலாக 1,072 கோடி ரூபாயும், கடன் பத்திர வெளியீடு மூலம் 296 கோடி ரூபாயையும் நிறுவனங்கள் திரட்டிக் கொண்டுள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|