பதிவு செய்த நாள்
13 ஜூன்2013
00:19
திருவனந்தபுரம்:அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய்மதிப்பு, சரிவடைந்து வருவது, வெளிநாடு வாழ்,கேரள மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திஉள்ளது. கடந்த சில நாட்களாக, அவர்கள் பல கோடி டாலர்களை, கேரளாவில் உள்ள தங்கள் குடும்பத்தினருக்கு அனுப்பி வருகின்றனர்.பலர்,வங்கி,தங்கம்,ரியல் எஸ்டேட் என, பல்வேறு முதலீடுகளை மேற் கொண்டுள்ளனர்.
கூடுதல் ஆதாயம்:கடந்த ஜனவரியில், வெளிநாடு வாழ்கேரள மக்கள், தாயகத்திற்கு அனுப்பிய தொகையின் மதிப்பு, ஒரு டாலருக்கு, 53.68 ரூபாயாக இருந்தது. இது, நடப்பு ஜூன் 11ம் தேதி, 58.40 ரூபாயாக உயர்ந்திருந்தது (இது டாலருக்கு எதிரான ரூபாய்மதிப்பில் வீழ்ச்சியாகும்).இதன்படி, கடந்த ஐந்தரை மாதங்களில், வெளிநாடு வாழ்கேரள மக்கள், இந்தியாவிற்கு அனுப்பிய தொகையில், ஒரு டாலருக்கு, அதிகபட்சமாக, 4.72 ரூபாய்கூடுதலாக கிடைத்துள் ளது.வெளிநாடுகளில், 28 லட்சம் கேரள மக்கள் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள், கடந்த சில தினங்களாக, ரூபாய்மதிப்பின் கடும் வீழ்ச்சியை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு, இந்தியாவிற்கு பணம் அனுப்பி வருகின்றனர்.
குறிப்பாக, வெளிநாடுகளில் இருந்து, ஸ்டேட்பேங்க் ஆப் திருவாங்கூரில் நாளொன்றுக்கு, 1.60-1.70கோடி டாலர் அள விலான அன்னியச் செலாவணி பரிவர்த்தனை நடைபெறும். இது,கடந்த இருவாரங்களில், இருமடங்காக உயர்ந்து, 3- 3.50 கோடி டாலராக உயர்ந்துள்ளது என, இவ்வங்கியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அது போன்று, அன்னியச் செலாவணி பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ள முத்தூட் மணி எக்ஸ்சேஞ் நிறுவனத்தின் டாலர் பரிமாற்றம், கடந்த சில தினங்களில், 15 சதவீதம் உயர்ந்துள்ளது.கேரளாவை சேர்ந்த தனலட்சமி பேங்க், கத்தோலிக் சிரியன் பேங்க், சவுத் இந்தியன் பேங்க் உள்ளிட்ட வங்கிகளிலும் பணப்பரிவர்த்தனை, டெபாசிட் ஆகியவை அதி கரித்து உள்ளன.வழக்கமாக, ஏப்ரல்-மே மாதங்களில், பள்ளி, கல்லூரி கட்டணங்களுக்காக, வெளிநாடு வாழ் கேரள மக்கள், தாயகத்திற்கு அதிக அளவில் பணம் அனுப்புவர். தற்போது ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால், லாபம் கருதி, கடன் வாங்கியாவது, தங்கள் குடும்பத்திற்கு பணம் அனுப்பி வருவதாக கூறப்படுகிறது.
பங்களிப்பு: சென்ற 2012-13ம் நிதியாண்டில், வெளிநாடு வாழ் கேரள மக்கள், தாயகத்திற்கு, 58,150 கோடி ரூபாய் அனுப்பியுள்ளனர். இது, முந்தைய 2011-12ம் நிதிஆண்டில், 49,965 கோடி ரூபாயாக இருந்தது. கேரள மாநில மொத்த உற்பத்தியில், வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனுப்பும் தொகையின் பங்களிப்பு, 30- 32 சதவீதம் என, வளர்ச்சி கல்வி மையத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
டாலர் மதிப்பின் உயர்வு தடுக்கப்பட்டது""அன்னிய முதலீடுகளை ஈர்க்க, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க உள்ளது. இதனால், வரும் நாட்களில் அன்னிய முதலீடுகள் குவியும்'' என, தலைமை பொருளாதார ஆலோசகர் ரகுராம் ராஜன் தெரிவித்திருந்தார்.இதன் எதிரொலியாக,நேற்றைய அன்னியச் செலாவணி சந்தையில், டாலர் புழக்கம் அதிகரித்தது.வர்த்தகத்தின் இறுதியில்,டாலருக்கு எதிரான ரூபாய்மதிப்பு,முந்தைய நாளை விட,0.60பைசா உயர்ந்து, 58.39 லிருந்து, 57.79 ஆக நிலை பெற்றது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|