பதிவு செய்த நாள்
16 ஜூன்2013
00:22
கடந்த மூன்று ஆண்டுகளாக, நாட்டின் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி குறிப்பிடத்தக்க அளவிற்கு வளர்ச்சி கண்டு வருகிறது. சென்ற 2012-13ம் நிதியாண்டில், நாட்டின் ஒட்டு மொத்த வேளாண் பொருட்கள் ஏற்றுமதி, 1,20,450 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இது, இதற்கு முந்தைய நிதியாண்டில், 86,028 கோடியாகவும், 2010-11ம் நிதியாண்டில், 43,731 கோடி ரூபாயாகவும் இருந்தது என, இந்திய புள்ளியியல் மற்றும் வர்த்தக நுண்ணா#வு தலைமை இயக்குனரகம் (டீ.ஜி.சி.ஐ.எஸ்.,) வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொத்தவரை:நாட்டின் மொத்த வேளாண் பொருட்கள் ஏற்றுமதியில், கொத்தவரையின் பங்களிப்பு, 18 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த ஒரு சில ஆண்டுகளாக, மேற்கத்திய நாடுகளின், எண்ணெய் நிறுவனங்கள், இந்தியாவிலிருந்து, அதிகளவில் கொத்தவரையை இறக்குமதி செய்து கொள்கின்றன.எண்ணெய் துரப்பணப் பணியில் கொத்தவரை விதை மிக அதிகஅளவில் பயன்படுத்தப்படுகிறது. கடந்த 2010-11 முதல் 2012-13 வரையிலான, மூன்று நிதியாண்டுகளில் கொத்தவரை ஏற்றுமதி, 624 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த 2010-11ம் நிதியாண்டில், கொத்தவரை ஏற்றுமதி, மதிப்பின் அடிப்படையில், 2,938 கோடி ரூபாயாக இருந்தது. இது, 2011-12ம் நிதியாண்டில், 16,523 கோடியாகவும், 2012-13ம் நிதிஆண்டில், 21,287 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.தொழில் துறை:உலக அளவில், கொத்தவரை உற்பத்தியில், இந்தியா முன்னணியில் உள்ளது. நம்நாட்டில், ஆண்டுக்கு சராŒரியாக, 10-15 லட்சம் டன் கொத்தவரை உற்பத்தியாகிறது. இதில், 40 சதவீதம் தொழில் துறைக்கு பயன்படுத்தப்படுகிறது.கடந்த 2012ம் ஆண்டில், சர்வதேச சந்தையில், கொத்தவரையின் விலை, 800 - 1,000 சதவீதம் அளவிற்கு அதிகரித்துள்ளது.இதற்கு, இந்தியாவில், பல மாநிலங்களில், ஏற்பட்ட வறட்சியால், கொத்தவரைக்கு பற்றாக்குறை ஏற்படும் என்ற ஐயப்பாட்டால், பல எண்ணெய் நிறுவனங்கள் கொத்தவரையை அதிகளவில் வாங்கியது தான் காரணம் என, இத்துறையைச் சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.நாட்டின் மொத்த வேளாண் பொருட்கள் ஏற்றுமதியில், கடந்த 2010-11ம் நிதியாண்டில், கொத்தவரையின் பங்களிப்பு வெறும், 7 சதவீதமாக இருந்தது. அடுத்த இரண்டு நிதி ஆண்டுகளில், இதன் பங்களிப்பு, 11 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
பாசுமதி அரிசி:கொத்தவரைக்கு அடுத்தபடியாக, பாசுமதி அரிசி, சாதாரண அரிசி மற்றும் மலர்கள் ஏற்றுமதி சிறப்பான அளவில் அதிகரித்து உள்ளது.கடந்த பல ஆண்டுகளாக, நாட்டின் வேளாண் பொருட்கள் ஏற்றுமதியில், பாசுமதி மற்றும் சாதாரண அரிசி வகைகள் முக்கிய பங்களிப்பை கொண்டு இருந்தன.கடந்த 2010-11 மற்றும் 2012-13ம் நிதியாண்டுகளுக்கிடையில், பாசுமதி அரிசி ஏற்றுமதி, 71 சதவீதம் வளர்ச்சி கண்டு உள்ளது. கடந்த 2010-11ம் நிதியாண்டில், பாசுமதி ஏற்றுமதி, 11,354 கோடி ரூபாயாக இருந்தது. இது, 2011-12ம் நிதியாண்டில், 15,449 கோடியாகவும், 2012-13ம் நிதியாண்டில், 19,390 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், மத்திய அரசு, சாதாரண அரிசி ஏற்றுமதி மீதான தடையை நீக்கியது. இதைஅடுத்து, கடந்த மூன்று நிதிஆண்டுகளில், இதன் ஏற்றுமதி, 6,000 சதவீதம் அதிகரித்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது.
அதாவது, கடந்த 2010-11ம் நிதியாண்டில், சாதாரண அரிசி ஏற்றுமதி, மதிப்பின் அடிப்படையில், 231 கோடி ரூபாயாக இருந்தது. இது, 2011-12ம் நிதியாண்டில், 8,659 கோடியாகவும், 2012-13ம் நிதியாண்டில், 14,421 கோடி ரூபாயாகவும் வளர்ச்சி கண்டு உள்ளது.மலர்கள்:நாட்டின் ஒட்டு மொத்த வேளாண் ஏற்றுமதியில், மேற்கண்ட மூன்று முக்கிய பொருட்கள் தவிர, மலர்கள் ஏற்றுமதியும், குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்து வருகிறது.அதாவது, கடந்த 2010-11ம் நிதியாண்டில், நாட்டின் மலர்கள் ஏற்றுமதி, 296 கோடி ரூபாயாக இருந்தது. இது, 2011-12ம் நிதியாண்டில், 365 கோடியாகவும், 2012-13ம் நிதியாண்டில், 423 கோடி ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. ஆக, மூன்று ஆண்டுகளில், மலர்கள் ஏற்றுமதி, 43 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது என, டீ.ஜி.சி.ஐ.எஸ்., அமைப்பின் புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|