நோக்கியா லூமியா 920 விலை குறைப்புநோக்கியா லூமியா 920 விலை குறைப்பு ... ரூபாய் மதிப்பு சரிவால் வீட்டு உபயோக சாதனங்கள் விலை உயரும் ரூபாய் மதிப்பு சரிவால் வீட்டு உபயோக சாதனங்கள் விலை உயரும் ...
சீனாவால் 10 லட்சம் இந்தியர்கள்வேலை இழப்பு:மலிவு விலை இறக்குமதி பொருட்களால்...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2013
00:38

சீனாவில் இருந்து மலிவு விலையில், வண்ணப் பொடிகள் மற்றும் வண்ணங்களை பீய்ச்சி அடிக்கும் தெளிப்பான்கள் அதிக அளவில் இறக்குமதியாகி வருகின்றன.இதன் காரணமாக, இத்தகைய பொருட்களின் தயாரிப்பு, வினியோகம் மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ள ஆயிரத்திற்கும்மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

மின்னணு பொருட்கள்:இதனால், 10 லட்சத்திற்கும் அதிகமானோர்வேலை இழந்துள்ளனர் என, "அசோசெம்' அமைப்புமேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:சீனாவில் இருந்து இறக்குமதியாகும் மலிவு விலை பொருட்களால், உள்நாட்டில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.குறிப்பாக, மின்சாரம் மற்றும் மின்னணு பொருட்கள், இயந்திரம் மற்றும் உ@லாக சாதனங்கள், ரசாயனம், கண்ணாடி, செராமிக் உள்ளிட்ட எட்டு வகை பொருட்களை தயாரிக்கும், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பெரும் இடர்பாட்டிற்கு உள்ளாகி உள்ளன.

கடந்த 2008-09 முதல் 2011-12 வரையிலான நான்கு நிதியாண்டு களில், இத்தகைய பொருட்கள், பிற நாடுகளை விட, சீனாவில் இருந்து மிக அதிக அளவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.கடந்த 2011-12ம் நிதியாண்டில், இந்தியாவின் மொத்த இறக்குமதியில், மேற்கண்ட பொருட்களின் பங்களிப்பு, 54 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகம், இத்தகவலை தெரிவித்துள்ளது.

பெரும்பாலான குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்,மேற்கண்ட எட்டு துறைகளை சார்ந்த பொருட்களை தயாரிப்பதால், அவை, இதர நாடுகளை விட, சீனாவின் கடுமையானபோட்டியை சந்தித்து வருகின்றன.வண்ண பொடிகள்ரசாயனங்கள் பிரிவில், வண்ணப் பொடிகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பெரும்பாலான நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.ஹோலி பண்டிகையின்போது, வண்ணப் பொடிகளை ஒருவர் மீது ஒருவர் பூசூவதும், தெளிப்பான்கள் மூலம், வண்ணங்களை பீய்ச்சி அடித்து மகிழ்வதும் வாடிக்கை.

ரங்கோலிகோல வகைகள்போடவும் வண்ணப் பொடிகள் பயன்படுகின்றன.இந்த வண்ணப் பொடிகளும், வண்ணங்களை பீய்ச்”ம் சாதனங் களும் மிகவும் மலிவான விலையில், சீனாவில் இருந்து இறக்குமதியாகின்றன. இதனால், இவ்வகை தொழிலில் ஈடுபட்டுள்ள ஆயிரத்திற்கும்மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. தெளிப்பான்கள் இவ்வகை பொருட்களை தயாரிக்கும் 1,500க்கும்மேற்பட்ட வட இந்திய நிறுவனங்களிடம் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.வட இந்தியாவில் தற்@பாது விற்பனையாகும் 100க்கு 95 வண்ணத் தெளிப்பான்கள், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவையாக உள்ளன.இவ்வகை சாதனங்களை தயாரித்து வந்த பெரும்பாலான இந்திய நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. இந்த வகையில், 10 லட்சத்திற்கும் அதிகமானோர்வேலை இழந்துள்ளதாக மதிப்பிடப்பட்டு உள்ளது.

இதேபோல், செராமிக் பொருட்களை தயாரிக்கும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்
களும், சீன பொருட்களால் பாதிக்கப்பட்டுள்ளன.மதிப்பீட்டு காலத்தில், இந்தியாவின் மொத்த செராமிக் பொருட்களின் இறக்குமதியில், சீனாவின் பங்களிப்பு, 64 சதவீதம், அதாவது, 2,700கோடி ரூபாய்(49.70கோடி டாலர்) என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது.

ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் பங்களிப்பு, முறையே, 7 மற்றும் 4 சதவீதமாக உள்ளது.கடந்த சில ஆண்டுகளில், சீன செராமிக் பொருட்களின் இறக்கு மதி, 8 சதவீதத்தில் இருந்து, 42 சதவீதமாக அதிகரித்துள்ளது. செராமிக் தொழில் இதன் எதிரொலியாக, இந்தியாவில் செராமிக் தொழிலில் ஈடுபட்டிருந்த பல்வேறு சிறு நிறுவனங்கள் காணாமல்போய்விட்டன.

இந்தியாவின் மொத்த இறக்கு மதியில், சீனாவின் பங்களிப்பு, 11.7 சதவீதமாக உயர்ந்துள்ளது.இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், தயாரிப்பு துறை, வளர்ச்சியின்றி,தேக்க நிலையில் உள்ளது. இதை, சீன ஏற்றுமதியாளர்கள் சாதகமாக பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)