பதிவு செய்த நாள்
19 ஜூன்2013
00:38
சீனாவில் இருந்து மலிவு விலையில், வண்ணப் பொடிகள் மற்றும் வண்ணங்களை பீய்ச்சி அடிக்கும் தெளிப்பான்கள் அதிக அளவில் இறக்குமதியாகி வருகின்றன.இதன் காரணமாக, இத்தகைய பொருட்களின் தயாரிப்பு, வினியோகம் மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ள ஆயிரத்திற்கும்மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
மின்னணு பொருட்கள்:இதனால், 10 லட்சத்திற்கும் அதிகமானோர்வேலை இழந்துள்ளனர் என, "அசோசெம்' அமைப்புமேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:சீனாவில் இருந்து இறக்குமதியாகும் மலிவு விலை பொருட்களால், உள்நாட்டில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.குறிப்பாக, மின்சாரம் மற்றும் மின்னணு பொருட்கள், இயந்திரம் மற்றும் உ@லாக சாதனங்கள், ரசாயனம், கண்ணாடி, செராமிக் உள்ளிட்ட எட்டு வகை பொருட்களை தயாரிக்கும், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பெரும் இடர்பாட்டிற்கு உள்ளாகி உள்ளன.
கடந்த 2008-09 முதல் 2011-12 வரையிலான நான்கு நிதியாண்டு களில், இத்தகைய பொருட்கள், பிற நாடுகளை விட, சீனாவில் இருந்து மிக அதிக அளவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.கடந்த 2011-12ம் நிதியாண்டில், இந்தியாவின் மொத்த இறக்குமதியில், மேற்கண்ட பொருட்களின் பங்களிப்பு, 54 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகம், இத்தகவலை தெரிவித்துள்ளது.
பெரும்பாலான குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்,மேற்கண்ட எட்டு துறைகளை சார்ந்த பொருட்களை தயாரிப்பதால், அவை, இதர நாடுகளை விட, சீனாவின் கடுமையானபோட்டியை சந்தித்து வருகின்றன.வண்ண பொடிகள்ரசாயனங்கள் பிரிவில், வண்ணப் பொடிகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பெரும்பாலான நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.ஹோலி பண்டிகையின்போது, வண்ணப் பொடிகளை ஒருவர் மீது ஒருவர் பூசூவதும், தெளிப்பான்கள் மூலம், வண்ணங்களை பீய்ச்சி அடித்து மகிழ்வதும் வாடிக்கை.
ரங்கோலிகோல வகைகள்போடவும் வண்ணப் பொடிகள் பயன்படுகின்றன.இந்த வண்ணப் பொடிகளும், வண்ணங்களை பீய்ச்”ம் சாதனங் களும் மிகவும் மலிவான விலையில், சீனாவில் இருந்து இறக்குமதியாகின்றன. இதனால், இவ்வகை தொழிலில் ஈடுபட்டுள்ள ஆயிரத்திற்கும்மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. தெளிப்பான்கள் இவ்வகை பொருட்களை தயாரிக்கும் 1,500க்கும்மேற்பட்ட வட இந்திய நிறுவனங்களிடம் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.வட இந்தியாவில் தற்@பாது விற்பனையாகும் 100க்கு 95 வண்ணத் தெளிப்பான்கள், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவையாக உள்ளன.இவ்வகை சாதனங்களை தயாரித்து வந்த பெரும்பாலான இந்திய நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. இந்த வகையில், 10 லட்சத்திற்கும் அதிகமானோர்வேலை இழந்துள்ளதாக மதிப்பிடப்பட்டு உள்ளது.
இதேபோல், செராமிக் பொருட்களை தயாரிக்கும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்
களும், சீன பொருட்களால் பாதிக்கப்பட்டுள்ளன.மதிப்பீட்டு காலத்தில், இந்தியாவின் மொத்த செராமிக் பொருட்களின் இறக்குமதியில், சீனாவின் பங்களிப்பு, 64 சதவீதம், அதாவது, 2,700கோடி ரூபாய்(49.70கோடி டாலர்) என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது.
ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் பங்களிப்பு, முறையே, 7 மற்றும் 4 சதவீதமாக உள்ளது.கடந்த சில ஆண்டுகளில், சீன செராமிக் பொருட்களின் இறக்கு மதி, 8 சதவீதத்தில் இருந்து, 42 சதவீதமாக அதிகரித்துள்ளது. செராமிக் தொழில் இதன் எதிரொலியாக, இந்தியாவில் செராமிக் தொழிலில் ஈடுபட்டிருந்த பல்வேறு சிறு நிறுவனங்கள் காணாமல்போய்விட்டன.
இந்தியாவின் மொத்த இறக்கு மதியில், சீனாவின் பங்களிப்பு, 11.7 சதவீதமாக உயர்ந்துள்ளது.இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், தயாரிப்பு துறை, வளர்ச்சியின்றி,தேக்க நிலையில் உள்ளது. இதை, சீன ஏற்றுமதியாளர்கள் சாதகமாக பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|