பதிவு செய்த நாள்
20 ஜூன்2013
00:53
கொச்சி:பருவ மழையால், கொப்பரை வரத்து குறைந்து, தேங்காய் எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.கடந்த சில மாதங்களாக, உள்நாட்டில் தேங்காய் எண்ணெய் விலை, அதிக ஏற்ற, இறக்கம் இன்றி நிலையாக இருந்தது.
கொப்பரை:இந்நிலையில், கேரளாவில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், சந்தைக்கு கொப்பரை வரத்து மிகவும் குறைந்து போயுள்ளது.இதன் காரணமாக, கேரளாவில் ஒரு கிலோ தேங்காய் எண்ணெய் விலை, 66.50ல் இருந்து, 70 ரூபாயாக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இதன் விலை, 62ல் இருந்து, 68 ரூபாயாக அதிகரித்துள்ளது என, கொச்சி எண்ணெய் வர்த்தகர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் பீ.ராவ் தெரிவித்துள்ளார். பொதுவாக, சந்தைகளுக்கு, 1,200 டன் கொப்பரை வரத்து இருக்கும். ஆனால், இது, தற்போது, 300 - 400 டன்னாக சரிவுஅடைந்துள்ளது.பருவமழை தவிர, கொப்பரை மற்றும் தேங்காய் எண்ணெய் விலை உயரும் என்ற எதிர்பார்ப்பால், விவசாயிகளும், வர்த்தகர்களும், கொப்ப ரையை கையிருப்பு வைத்துள்ளனர்.மேலும், டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பு சரிவால், இறக்குமதி செய்யப்படும் பாமாயில் உள்ளிட்ட இதர எண்ணெய்களின் விலையும் உயர்ந்துள்ளன.
கொள்முதல்:இச்சூழ்நிலையில், பெரிய நிறுவனங்கள் அதிக அளவில் தேங்காய் எண்ணெய் கொள்முதல் செய்து வருகின்றன. இது போன்ற காரணங்களாலும் இதன் விலை உயர்ந்து வருகிறது என, கொச்சியை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் குறிப்பிட்டார். கொச்சி சந்தையில், கடந்த 10 நாட்களில், சில்லரை விற்பனையில், 15 கிலோ தேங்காய் எண் ணெ யின் விலை, 860ல் இருந்து, 1,020 ரூபாயாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|