ஆடைகள் ஏற்றுமதி 1,700 கோடி  டாலராக உயரும்ஆடைகள் ஏற்றுமதி 1,700 கோடி டாலராக உயரும் ... விமான பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு விமான பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு ...
கொப்பரை வரத்து குறைந்ததால்தேங்காய் எண்ணெய் விலை உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2013
00:53

கொச்சி:பருவ மழையால், கொப்பரை வரத்து குறைந்து, தேங்காய் எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.கடந்த சில மாதங்களாக, உள்நாட்டில் தேங்காய் எண்ணெய் விலை, அதிக ஏற்ற, இறக்கம் இன்றி நிலையாக இருந்தது.
கொப்பரை:இந்நிலையில், கேரளாவில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், சந்தைக்கு கொப்பரை வரத்து மிகவும் குறைந்து போயுள்ளது.இதன் காரணமாக, கேரளாவில் ஒரு கிலோ தேங்காய் எண்ணெய் விலை, 66.50ல் இருந்து, 70 ரூபாயாக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இதன் விலை, 62ல் இருந்து, 68 ரூபாயாக அதிகரித்துள்ளது என, கொச்சி எண்ணெய் வர்த்தகர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் பீ.ராவ் தெரிவித்துள்ளார். பொதுவாக, சந்தைகளுக்கு, 1,200 டன் கொப்பரை வரத்து இருக்கும். ஆனால், இது, தற்போது, 300 - 400 டன்னாக சரிவுஅடைந்துள்ளது.பருவமழை தவிர, கொப்பரை மற்றும் தேங்காய் எண்ணெய் விலை உயரும் என்ற எதிர்பார்ப்பால், விவசாயிகளும், வர்த்தகர்களும், கொப்ப ரையை கையிருப்பு வைத்துள்ளனர்.மேலும், டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பு சரிவால், இறக்குமதி செய்யப்படும் பாமாயில் உள்ளிட்ட இதர எண்ணெய்களின் விலையும் உயர்ந்துள்ளன.
கொள்முதல்:இச்சூழ்நிலையில், பெரிய நிறுவனங்கள் அதிக அளவில் தேங்காய் எண்ணெய் கொள்முதல் செய்து வருகின்றன. இது போன்ற காரணங்களாலும் இதன் விலை உயர்ந்து வருகிறது என, கொச்சியை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் குறிப்பிட்டார். கொச்சி சந்தையில், கடந்த 10 நாட்களில், சில்லரை விற்பனையில், 15 கிலோ தேங்காய் எண் ணெ யின் விலை, 860ல் இருந்து, 1,020 ரூபாயாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)