பதிவு செய்த நாள்
20 ஜூன்2013
14:55
புதுடில்லி : இந்திய ரூபாய் மதிப்பிலான வீழ்ச்சியை தடுக்க ரிசர்வ் வங்கி தீயா வேலை செய்து வருகிறது என திட்டக்கமிஷன் துணை தலைவர் மான்டெக் சிங் அலுவாலியா தெரிவித்துள்ளார்.
சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இன்று காலையில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.60-ஐ எட்டியது. இதனால் இந்திய பங்குசந்தைகளும் இன்று கடும் சரிவை சந்தித்து முதலீட்டாளர்களுக்கு பெரும் கவலை கொடுத்துள்ளது.
இந்நிலையில் ரூபாயின் மீதான வீழ்ச்சி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திட்டக்குழு துணை தலைவர் மான்டெக் சிங் அலுவாலியா, அமெரிக்க பெரடல் வங்கியின் அறிவிப்பு மற்றும் உலகளாவிய பொருளாதார மந்தநிலையால் இந்திய ரூபாயின் மதிப்பில் வீழ்ச்சி காணப்படுகிறது. இந்திய ரூபாய் மதிப்பு மட்டுமல்ல பிரேசில், தென் ஆப்ரிக்கா, மெக்ஸிகோ போன்ற நாடுகளிலும், ஆசியாவில் பிற நாடுகளிலும் வீழ்ச்சி காணப்படுகிறது. இந்த வீழ்ச்சி தற்காலிகம் தான். இந்த வீழ்ச்சியை தடுக்க ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதலீட்டாளர்கள் யாரும் பயப்பட வேண்டாம், விரைவில் ரூபாய் மதிப்பிலான வீழ்ச்சி சரியாகி ஏற்றம் காணும் என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|