தங்கம் விலை ஒரே நாளில் ரூ.224 குறைவுதங்கம் விலை ஒரே நாளில் ரூ.224 குறைவு ... ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.224 குறைவு ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.224 குறைவு ...
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மூன்று நாட்களில் கிடைக்க ஏற்பாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2013
05:59

புதுடில்லி:தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியம், சந்தாதாரர்களுக்கு பணத்தை திரும்ப அளிப்பதற்கான காலக் கெடுவை, 30 நாட்களில் இருந்து, 3 நாட்களாக குறைக்க திட்டமிட்டுள்ளது.
புதிய கணக்குகள்:இந்த நிதியம், 8 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்களின், 5 லட்சம் கோடி ரூபாய்அளவிலான, ஓய்வூதிய நிதியை கையாண்டு வருகிறது. நாடு முழுவதும் உள்ள, இந்நிதியத்தின் அனைத்து கிளைகளையும், கணினியில் ஒருங்கிணைப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.சமீப ஆண்டுகளாக அதிகரித்து வரும், சந்தாதாரர்களின் எண்ணிக்கை, பணி மாற்றத்தினால் உருவாகும் புதிய கணக்குகள், பணம் கோரும் மனுக்கள் பெருகி வருவது போன்றவற்றால், இந்நிதியத்தின் பணிச் சமை அதிகரித்துள்ளது.இதனால், ஓய்வு பெற்ற சந்தாதாரர்களுக்கு, விதிமுறைப்படி, 30 நாட்களுக்குள் பணத்தை பட்டுவாடா செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பண பட்டுவாடா:சென்ற 2012-13ம் நிதியாண்டில், இந்நிதியம், 1.08 கோடி சந்தாதாரர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு கண்டுள்ளது. அதே சமயம், 12.60 லட்சம் கோரிக்கை மனுக்களுக்கு, 30 நாட்களுக்குள் தீர்வு வழங்க முடியவில்லை. இவற்றில், 1.41 லட்சம் சந்தாதாரர்களுக்கு, 3 மாதங்களை கடந்த பிறகும் பணப் பட்டுவாடா செய்யப்படவில்லை. சென்ற நிதியாண்டில், மொத்தம் வந்த கோரிக்கை மனுக்களில், 10 சதவீத மனுக்களுக்கு மட்டுமே, 3 நாட்களில் தீர்வு காணப்பட்டுள்ளது.
அதே சமயம், நடப்பு 2013-14ம் நிதியாண்டில், ஏப்ரல் முதல் ஜூன் 11ம் தேதி வரையிலான காலத்தில், நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள், 15.66 சதவீத கோரிக்கை மனுக்களுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது.இதே காலத்தில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியத்தின், 19 பிராந்திய அலுவலகங்கள், 61 சதவீதத்திற்கும், மேற்பட்ட கோரிக்கை மனுக்களை உடனுக்குடன் பரிசீலித்து, 3 நாட்களில் பணத்தை திரும்ப அளித்து உள்ளன. இவற்றில், 10 அலுவலகங்கள், 90 சதவீதத்திற்கும் அதிகமான மனுக்களை, 3 நாட்களில் பைசல் செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஒப்புதல்:எனினும், சந்தாதாரர்களிடம் இருந்து வரும், அனைத்து கோரிக்கைகளையும் 3 நாட்களில் பைசல் செய்ய, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியம் திட்டமிட்டுள்ளது. தற்போது, ஒரு சந்தாதாரரின் ஓய்வூதிய நிதி தொடர்பான மனுவுக்கு, 47 அதிகாரிகளிடம் தனித் தனியாக ஒப்புதல் பெற வேண்டிய நிலை உள்ளது. இதில் ஏற்படும் காலதாமதம் காரணமாகவே, நிர்ணயிக்கப்பட்ட நாட்களுக்குள், மனு மீது தீர்வு காண முடியாத நிலை ஏற்படுகிறது என, அர” அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
"இருந்தபோதிலும், 3 நாட்களில் ஒரு மனுவிற்கு தீர்வு காண்பதை சாத்தியமாக்கலாம்' என, இ.பி.எப்.ஓ-வின் தலைமை கணக்கு அதிகாரியும், நிதி ஆலோசகருமான சஞ்சய்குமார் தெரிவித்துள்ளார்.இத்திட்டம் தொடர்பாக விவாதிக்க, இவரது தலைமையில், இ.பி.எப்.ஓ-வின், அனைத்து பிராந்திய உயரதிகாரிகளின் கூட்டம் வரும் ஜூலை மாதம் டில்லியில் நடைபெற உள்ளது. இதில், கோரிக்கை மனுக்களுக்கு, 3 நாட்களில் தீர்வளிப்பதற்கான செயல் திட்டம் வகுக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
முயற்சி:நடப்பு நிதியாண்டில், 1.20 கோடி சந்தாதாரர்கள், ஓய்வூதிய நிதி கோரி மனு அளிப்பார்கள் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில், 80 சதவீத மனுக்களை 3 நாட்களில் முடிக்க இ.பி.எப்.ஓ., திட்டமிட்டு, அதற்கான முயற்சிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன என, அந்த அதிகாரி மேலும் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)