பதிவு செய்த நாள்
24 ஜூன்2013
00:30
மத்திய அரசு, நடப்பாண்டு ஜனவரி மாதம், 17ம்தேதி, டீசல் விற்பனையில், இரட்டை விலை கொள்கையை அமல்படுத்தியது. இதையடுத்து, ஜனவரி மாதம் முதல் இதுவரையிலுமாக, மொத்த விலை அடிப்படையில், விற்கப்படும், டீசல் விற்பனை, 41 சதவீதம் சரிவடைந்துள்ளது என, அகில இந்திய பெட்ரோலியப் பொருட்கள் விற்பனையாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழகம்:அதேசமயம், இதே காலத்தில், சில்லரை டீசல் விற்பனை, 13.2 சதவீதம் அதிகரித்துள்ளது.கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், எண்ணெய் நிறுவனங் களின், மொத்த விலை டீசல் விற்பனை, 1,028.50 கிலோ லிட்டராக இருந்தது. இது, கடந்த ஏப்ரலில், 607 கிலோ லிட்டராக சரிவடைந்துள்ளது.கடந்த 2011-12ம் நிதியாண்டில் பயன்படுத்தப்பட்ட, 7கோடி டன் டீசலில், மொத்த விலை டீசல் விற்பனை, 1.10கோடி டன்னாக இருந்தது. இதில், 30 லட்சம் டன், பாதுகாப்பு மற்றும் ரயில்வே துறையால் பயன்படுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில், மத்திய அரசின் இரட்டை விலை கொள்கையால், மாநில அரசுகளின்போக்குவரத்து துறை மற்றும் லாரி உரிமையாளர்களின் டீசல் பயன்பாடு, 40 லட்சம் டன்னாக சரிவடைந்துள்ளது.குறிப்பாக, ஆந்திரா, ராஜஸ்தான், கர்நாடகா, தமிழகம் மற்றும் குஜராத் ஆகிய மாநில அரசுகளுக்கு சொந்தமான போக்குவரத்து கழகங்கள், மொத்த விலை டீசல், அதிகரிப்பால், சில்லரை விற்பனையில், டீசலை வாங்க துவங்கின. இதன் காரணமாகவே, மொத்த டீசல் விற்பனை மிகவும் சரிவடைந்துள்ளது.
போக்குவரத்து கழகங்கள்:மத்திய அரசின் இரட்டை விலை கொள்கையால், சில்லரை டீசல் விற்பனையை விட, மொத்த அளவில் விற்கப்படும், டீசல் விலை லிட்டருக்கு, 9-11 ரூபாய் அதிகமாக உள்ளது.கடந்த 2011-12ம் நிதியாண்டில், டீசல் விற்பனையில், மொத்த அளவில், விற்பனை செய்யப்படும் டீசலின் அளவு, 18 சதவீதமாக இருந்தது. இது, இரட்டை விலை கொள்கைக்கு பின், அதாவது, ஜனவரி மாதத்திற்கு பின், 10 சதவீதமாக சரிவடைந்துள்ளது.
மொத்த விலை டீசல் விற்பனை சரிவிற்கு, மாநில அரசுகளின்போக்குவரத்து கழகங்கள், கட்டுமானம், சிமென்ட், சுரங்கம் மற்றும் உருக்கு துறை நிறுவனங்களின் பங்களிப்பு மிகவும் குறைந்ததுதான் காரணம் என, புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கு:இந்நிலையில், தமிழக அரசு, சென்னை ஐகோர்ட்டில், இரட்டை விலை கொள்கையை எதிர்த்து, வழக்கு தொடுத்தது. இதற்கு, ஐகோர்ட்டும், தற்காலிகமாக தடை விதித்தது. பின், இத்தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. தமிழக அரசுக்கு சொந்தமாக, எட்டுபோக்குவரத்து கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இரட்டை விலை கொள்கையால்,போக்குவரத்து கழகங்களுக்கு, ஆண்டுக்கு, 745.55கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. இந்தபோக்குவரத்து கழகங்களுக்கு, ஆண்டுக்கு, 21 லட்சம் டன்னும், ரயில்வே துறைக்கு, 22.70 லட்சம் டன் டீசலும்தேவைப்படுகிறது.
செலவினம்:மொத்த விலையில் டீசல் வாங்கும் நிலையில், மாநில அரசின்போக்குவரத்து கழகங்களுக்கு, ஆண்டுக்கு கூடுதலாக, 2,462கோடி ரூபாயும்,ரயில்வே துறைக்கு கூடுதலாக, 2,700கோடி ரூபாயும் செலவு ஏற்படும் என, புள்ளிவிவரத்தில்மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள், அடக்க விலைக்கும் குறைவாக, டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் ஆகியவற்றை விற்பனை செய்வதால், இவற்றிற்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
இதை ஈடுகட்டும் வகையில், மத்திய அரசும், கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி நிறுவனங்களும் மானியம் அளிக்கின்றன. மானியச் சுமையை குறைக்கும் வகையில், மத்திய அரசு, நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|