பொருளாதார மண்டலங்களின்ஏற்றுமதி 31 சதவீதம் அதிகரிப்புபொருளாதார மண்டலங்களின்ஏற்றுமதி 31 சதவீதம் அதிகரிப்பு ... இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்றம் இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்றம் ...
வெளிநாடு வாழ் இந்தியர்கள்அனுப்பிய தொகை 15 சதவீதம் உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜூலை
2013
00:55

மும்பை:டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பு சரிவடைந்துள்ளதால், நடப்பு 2013ம் ஆண்டில், ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாத காலத்தில், வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்.ஆர்.ஐ.,), இந்தியாவிற்கு அனுப்பிய தொகை, கடந்த ஆண்டின் இதே காலத்தில் அனுப்பியதை விட, 12-15 சதவீதம் அதிகரித்துள்ளதாக, இத்துறையைச் சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ரூபாய்மதிப்பு சரிவை சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் வகையில், வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்தியாவிற்கு அனுப்பிய தொகை சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது. கடந்த 2012ம் ஆண்டில், வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்தியாவிற்கு அனுப்பிய தொகை, 6,935 கோடி டாலராக இருந்தது.இந்நிலையில், கடந்த ஒரு சில மாதங்களாக, டாலருக்கு எதிரான ரூபாய்மதிப்பு, தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. குறிப்பாக, சென்ற வாரத்தில் இதன் மதிப்பு, 60 ரூபாய்க்கும் மேல் வீழ்ச்சி கண்டது. எனவே, இந்த நிலை தொடரும் பட்சத்தில், வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனுப்பும் தொகை மேலும் அதிகரிக்கும்.
இதுகுறித்து, துபாய்நாட்டில் பணிபுரியும் ஒருவர் கூறியதாவது:ரூபாய்வெளிமதிப்பு சரிவடைந்துள்ளதால், இந்தியாவில் வாங்கியுள்ள வீட்டு கடனை திரும்பச் செலுத்துவதற்காக, அலுவலகத்தில், வட்டி இல்லாத கடனுக்கு விண்ணப்பித்துள்ளேன். இத்தொகை கிடைத்த உடன், வீட்டு கடனை அடைக்க திட்டமிட்டு உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.தற்போதைய நிலையில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனுப்பும் தொகை, 4 சதவீதம் என்ற அளவில் உள்ளது.வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனுப்பும் தொகை தவிர, கடந்த 2011-12ம் நிதியாண்டில், அன்னிய நிதி நிறுவனங்கள், இந்தியாவில் மேற்கொண்ட முதலீடு, 4,684 கோடி டாலராக இருந்தது. இது, இந்தியாவில், முதலீடு செய்வது மிகவும் பாதுகாப்பானது என்பதை உணர்த்துவதாக உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)