பதிவு செய்த நாள்
01 ஜூலை2013
09:59
மும்பை : வாரத்தின் முதல்நாளில் இந்திய பங்குசந்தைகள் ஏற்றத்துடன் துவங்கி இருக்கிறது. வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 60.88 புள்ளிகள் உயர்ந்து 19,456.69 எனும் நிலையிலும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 14.15 புள்ளிகள் உயர்ந்து 5,856.35 எனும் அளவிலும் இருந்தன.
ரூபாயின் மதிப்பில் காணப்பட்ட வீழ்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருவதாலும், இயற்கை எரிவாயு விலையை இருமடங்காக உயர்த்த கடந்தவரம் மத்திய அரசு அனுமதி அளித்ததால் அதுதொடர்பான பங்குகள் விலையில் ஏற்றம் இருப்பதால் இந்திய பங்குசந்தைகள் உயர்ந்து இருப்பதாக பங்குசந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்திய பங்குசந்தைகள் போன்று ஆசியாவின் பிற பங்குசந்தைகளான ஹாங்காங்கின் ஹேங்சேங் 1.78 சதவீதமும், ஜப்பானின் நிக்கி 0.30 சதவீதமும் உயர்ந்து காணப்பட்டன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|