தங்கம் விலையில் பெரிய மாற்றமில்லைதங்கம் விலையில் பெரிய மாற்றமில்லை ... சிமென்ட் விலை மீண்டும் உயர்வு சிமென்ட் விலை மீண்டும் உயர்வு ...
தகவல் தொடர்பு நிறுவனங்களுக்கு "டிராய்' அபராதம் விதிக்கலாம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜூலை
2013
14:44

புதுடில்லி:விதிமுறைகளை மீறி செயல்படும் தகவல் தொடர்பு நிறுவனங்களுக்கு, அபராதம் விதிக்கும் அதிகாரத்தை, "டிராய்'க்கு வழங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: தொலைத் தொடர்பு துறை குறித்த விஷயங்களை கண்காணிப்பதற்காக, தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான, "டிராய்' செயல்பட்டு வருகிறது. தொலைத் தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களின் கட்டணங்கள், அவற்றின் தரம் உள்ளிட்ட விஷயங்களை, "டிராய்' கண்காணித்து வருகிறது. ஆனாலும், தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை விதிகளை மீறி செயல்படும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கும் அதிகாரம், "டிராய்'க்கு இல்லை. "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேட்டுக்கு பின், "டிராய்'க்கு மேலும், பல அதிகாரங்களை வழங்க, அரசு முடிவு செய்தது.

தற்போது, தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கும் உரிமையை, "டிராய்'க்கு வழங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கான, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவிட்டன. செய்தி மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், திட்ட கமிஷன் ஆகியவற்றிடம் கருத்து கேட்கப்பட்டு உள்ளது. சம்பந்தபட்ட அமைச்சகங்களின் கருத்து கேட்கப்பட்ட பின், அதுகுறித்து திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு, சட்ட அமைச்சகத்துக்கு அனுப்பப்படும். அதற்கு பின், மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்படும். இவ்வாறு, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)