பதிவு செய்த நாள்
01 ஜூலை2013
14:44
புதுடில்லி:விதிமுறைகளை மீறி செயல்படும் தகவல் தொடர்பு நிறுவனங்களுக்கு, அபராதம் விதிக்கும் அதிகாரத்தை, "டிராய்'க்கு வழங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: தொலைத் தொடர்பு துறை குறித்த விஷயங்களை கண்காணிப்பதற்காக, தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான, "டிராய்' செயல்பட்டு வருகிறது. தொலைத் தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களின் கட்டணங்கள், அவற்றின் தரம் உள்ளிட்ட விஷயங்களை, "டிராய்' கண்காணித்து வருகிறது. ஆனாலும், தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை விதிகளை மீறி செயல்படும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கும் அதிகாரம், "டிராய்'க்கு இல்லை. "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேட்டுக்கு பின், "டிராய்'க்கு மேலும், பல அதிகாரங்களை வழங்க, அரசு முடிவு செய்தது.
தற்போது, தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கும் உரிமையை, "டிராய்'க்கு வழங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கான, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவிட்டன. செய்தி மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், திட்ட கமிஷன் ஆகியவற்றிடம் கருத்து கேட்கப்பட்டு உள்ளது. சம்பந்தபட்ட அமைச்சகங்களின் கருத்து கேட்கப்பட்ட பின், அதுகுறித்து திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு, சட்ட அமைச்சகத்துக்கு அனுப்பப்படும். அதற்கு பின், மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்படும். இவ்வாறு, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|