பதிவு செய்த நாள்
03 ஜூலை2013
12:08
புதுடில்லி: தொலை தொடர்பு துறையில், நேரடி அன்னிய முதலீட்டை, 100 சதவீதமாக்க, டெலிகாம் கமிஷன் ஒப்புதல் வழங்கியது. தொலை தொடர்பு துறையில், தற்போது, நேரடி அன்னிய முதலீடு தற்போது, 74 சதவீதமாக உள்ளது. இத்துறையில், நிலவும் கடும் போட்டி மற்றும் நிதி நெருக்கடியை சமாளிக்க, 100 சதவீத அன்னிய முதலீட்டை அனுமதிக்க வேண்டும் என கோரி, மத்திய தொலை தொடர்பு அமைச்சகம், தொழிற்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டு துறைக்கு அனுப்பி வைத்தது. இதற்கிடையில், பல்வேறு அமைச்சகங்கள் இடம்பெற்ற, டெலிகாம் கமிஷன், இது குறித்து ஆலோசனை நடத்தி, 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதியளித்தது. மேலும், இத்துறைக்கு உதவுவதற்காக, டெலிகாம் நிதி கழகம் அமைப்பது பற்றியும், கமிஷன் ஆலோசனை நடத்தியது. ஐந்தாண்டு காலத்தில், டெலிகாம் நிதி கழகத்தின் மூலம், 38 ஆயிரம் கோடி ரூபாய் நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|