பதிவு செய்த நாள்
05 ஜூலை2013
01:15
புதுடில்லி:வரும் 2015ம் ஆண்டில், இந்தியாவில், இணையதளம் வாயிலான வர்த்தகம், 10 ஆயிரம் கோடி டாலரை (57.30 லட்சம் கோடி ரூபாய்) எட்டும் என, பொருளாதார புலனாய்வு அமைப்பின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தொகை பெருக்கத்தில், இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. எனினும், நம்நாட்டில், இணையதள சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை, 10 சதவீதம் என்ற அளவிற்கே உள்ளது.மொத்த உள்நாட்டு உற்பத்தியில், இதன் பங்களிப்பு, 1.6 சதவீதம் என்ற அளவில் உள்ளது.
தற்போது, இணையதள வர்த்தகத்தின் மொத்த வருவாயில், விளம்பரம் வாயிலான வருவாய் 7 சதவீதம், அதாவது 41 கோடி டாலராக உள்ளது. இதில் 60 சதவீதம், கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்களுக்கு செல்கிறது. எஞ்சிய சதவீதத்தை இதர ஆன்-லைன் நிறுவனங்கள் பங்கு போட்டுக் கொள்கின்றன. வரும் 2015ம் ஆண்டில், இணையதள வர்த்தகம், இரண்டு மடங்கு அதிகரித்து, 10 ஆயிரம் கோடி டாலரை எட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, டிஜிட்டல் மற்றும் அலைபேசி வாயிலாக விளம்பரம் மேற்கொள்ளும் ஆர்வம் சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. இது, இணையதள பொருளாதார வளர்ச்சிக்கு உந்து சக்தியாக திகழும் என, ஆய்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|