நிலக்கடலை உற்பத்தி 5 லட்சம் டன்னாக உயரும்நிலக்கடலை உற்பத்தி 5 லட்சம் டன்னாக உயரும் ... தங்கம் விலை சிறிது உயர்வு! தங்கம் விலை சிறிது உயர்வு! ...
துறைமுகங்கள் கையாண்ட சரக்கு 13.72 கோடி டன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜூலை
2013
00:29

புதுடில்லி:ஏற்றுமதியில் சரிவு நிலை மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால், நடப்பு 2012-13ம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாத காலத்தில், நாட்டின் முக்கிய துறைமுகங்கள் கையாண்ட சரக்கு, 13.72 கோடி டன்னாக சற்று குறைந்துள்ளது.
இது, கடந்த நிதியாண்டின் இதே மூன்று மாத காலத்தில், 13.85 கோடி டன்னாக இருந்தது. ஆக, கணக்கீட்டு காலத்தில், முக்கிய துறைமுகங்கள் கையாண்ட சரக்கு, 0.99 சதவீதம் குறைந்து உள்ளது என, இந்திய துறைமுகங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள, தற்காலிக புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோல்கட்டா:உள்நாட்டில் கோல்கட்டாவில், இரண்டு துறைமுகங்கள் உள்ளன. இவ்விரு துறைமுகங்களும் கையாண்ட சரக்கின் அளவு, நடப்பு நிதியாண்டின் முதல் மூன்று மாத காலத்தில், ஒட்டு மொத்த அளவில், 0.13 சதவீதம் உயர்ந்து, 100.13 லட்சம் டன்னிலிருந்து, 100.26 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.
பரதீப் துறைமுகம்:கணக்கீட்டு காலாண்டில், கோல்கட்டா டாக் சிஸ்டம்ஸ் கையாண்ட சரக்கின் அளவு, 7.73 சதவீதம் வளர்ச்சி கண்டு, 27.43 லட்சம் டன்னிலிருந்து, 29.55 லட்சம் டன்னாக அதிகரித்து உள்ளது.அதேசமயம், ஹால்டியா டாக் காம்ப்ளக்ஸ் துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, 2.74 சதவீதம் சரிவடைந்து, 72.70 லட்சம் டன்னிலிருந்து, 70.71 லட்சம் டன்னாக குறைந்துள்ளது.
பரதீப் துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, 44.79 சதவீதம் அதிகரித்து, 1.17 கோடி டன்னிலிருந்து, 1.70 கோடி டன்னாக வளர்ச்சி கண்டுள்ளது. அதேசமயம், விசாகப்பட்டினம் கையாண்ட சரக்கின் அளவு, 2.22 சதவீதம் சரிவடைந்து, 1.49 கோடி டன்னிலிருந்து, 1.46 கோடி டன்னாக குறைந்துள்ளது.
சென்னை துறைமுகம்:தமிழகத்தில், மூன்று பெரிய துறைமுகங்கள் இடம்பெற்று உள்ளன. இவற்றுள் எண்ணூர் துறைமுகம் நிறுவன அளவில் செயல்பட்டு வருகிறது. இத்துறைமுகம், கையாண்ட சரக்கின் அளவு, 48.44 சதவீதம் வளர்ச்சி கண்டு, 41.76 லட்சம் டன்னில்இருந்து, 61.99 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.
கணக்கீட்டு காலாண்டில், சென்னை துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, 6 சதவீதம் குறைந்து, 1.37 கோடி டன்னில்இருந்து, 1.28 கோடி டன்னாக சரிவடைந்துள்ளது.தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, 6.81 சதவீதம் சரிவுஅடைந்து, 72.74 லட்சம் டன்னிலிருந்து, 67.79 லட்சம் டன்னாக குறைந்துள்ளது.
கொச்சி துறைமுகம்:கொச்சி துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, 5.25 சதவீதம் அதிகரித்து, 49.89 லட்சம் டன்னிலிருந்து, 52.51 லட்சம் டன்னாக வளர்ச்சி கண்டு உள்ளது. புதிய மங்களூர் துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, 12.26 சதவீதம் வளர்ச்சி கண்டு, 86.11 லட்சம் டன்னிலிருந்து, 96.67 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.இந்நிலையில், மர்மகோவா துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, 72.65 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 97.68 லட்சம் டன்னிலிருந்து, 26.72 லட்சம் டன்னாக சரிவடைந்துள்ளது.
மும்பை துறைமுகம்:அதே போன்று, மும்பை துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவும், 14.06 சதவீதம் குறைந்து, 1.55 கோடி டன்னிலிருந்து, 1.33 கோடி டன்னாக சரிவடைந்துள்ளது.ஜவகர்லால் நேரு போர்ட் டிரஸ்ட் (ஜே.என்.பி.டி.,) துறைமுகம் கையாண்ட சரக்கு, 7.11 சதவீதம் சரிவடைந்து, 1.68 கோடி டன்னிலிருந்து, 1.56 கோடி டன்னாக குறைந்துள்ளது.
அதேசமயம், கணக்கீட்டு காலாண்டில், கண்ட்லா துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, 10.03 சதவீதம் வளர்ச்சி கண்டு, 2.12 கோடி டன்னில்இருந்து, 2..33 கோடி டன்னாக அதிகரித்துள்ளது என, இந்திய துறைமுகங்கள் கூட்டமைப்பின் புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)