பதிவு செய்த நாள்
14 ஜூலை2013
01:33
மும்பை:நடப்பாண்டு ஜூன் மாதத்தில், நுகர்வோர் விலை குறியீட்டு எண் அடிப்படையில் கணக்கிடப்படும், நாட் டின் சில்லரை பணவீக்கம், 9.87சதவீதமாக அதிகரித்துள்ளது.இது, இதற்கு முந்தைய மே மாதத்தில், 9.31 சதவீதம் என்ற அளவில்சற்று குறைந்திருந்தது என, மத்திய அரசின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள் ளது. சென்ற ஜூன் மாதத்தில், காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை, மிகவும் கடுமையாக உயர்ந்ததையடுத்து, சில்லரை பணவீக்கம் அதிகரித்து உள்ளது. குறிப்பாக, மதிப்பீட்டு மாதத்தில், காய்கறிகளின் விலை, கடந்தாண்டின் இதே மாதத்தை விட, 14.55சதவீதம் அதிகரித்துள்ளது.
உணவு பணவீக்கமும், சென்ற ஜூன் மாதத்தில்,11.84சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, இதற்கு முந்தைய, மே மாதத் தில்,10.65சதவீதமாக இருந்தது. சென்ற ஜூனில், கிராமப்புறங்களுக்கான சில்லரை பணவீக்கம், 9.63சதவீதமாக இருந்தது.இது, இதற்கு முந்தைய மாதத்தில், 8.98சதவீதமாக இருந்தது. நகர்புறங்களுக்கான சில்லரை பணவீக்கம், 9.65சதவீதத்திலிருந்து, 10.13சதவீதமாக உயர்ந்து உள்ளது.
சில்லரை பணவீக்கம் அதிகரித்துள்ளதையடுத்து,ரிசர்வ் வங்கி, இம்மாத இறுதியில் அறிவிக்க உள்ள அதன் நிதி ஆய்வுக் கொள்கையில்,வங்கி கடனுக்கான "ரெப்போ' விகிதங்களை குறைக்குமா என்ற ஐயப்பாடு ஏற்பட்டுள்ளது என, இத்துறையை சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|