பதிவு செய்த நாள்
23 ஜூலை2013
11:22
சென்னை: "இணையதளம் மூலம், குறைந்த கட்டணத்தில் பணம் அனுப்பும், உடனடி மணி ஆர்டர் சேவையை, அனைவரும் பயன்படுத்தி கொள்ளலாம்' என, சென்னை மண்டல தபால் துறை தலைவர் தெரிவித்து உள்ளார். இதுகுறித்த அவரது அறிக்கை: நாட்டின் எந்த பகுதியில் இருந்தும், இரண்டு நபர்கள், இணையதளம் மூலம் பணம் அனுப்பும், உடனடி மணி ஆர்டர் சர்வீசில், 10 நிமிடங்களில் பணம் அனுப்பவும், பெறவும் முடியும். குறைந்த கட்டணத்தில், 50 ஆயிரம் ரூபாய் வரை, சுலபமாக பணம் அனுப்பும் இந்த சேவைக்கு, நல்ல வரவேற்பு காணப்படுகிறது. அஞ்சல் நிலையங்களில், இதற்காக உள்ள சேவை மையங்களில், பணம் அனுப்பும் நபருக்கு, 16 இலக்க எண் வழங்கப்படும். யாருக்கு பணம் அனுப்புகிறாரோ அவருக்கு, மொபைல், இ-மெயில் போன்றவற்றின் மூலம், அந்த எண்ணை தெரிவிக்க வேண்டும். பணம் பெறுபவர், தன் அடையாள அட்டை மற்றும் 16 இலக்க எண்ணை, அஞ்சல் நிலையங்களில் காண்பித்து, பணத்தை பெற்று கொள்ளலாம். இந்த சேவையின் மூலம் பணம் அனுப்புவதும், பெறுவதும் சுலபாக நடக்கிறது. இந்த சேவையில், 1,000 முதல், 10 ஆயிரம் ரூபாய் வரை பணம் அனுப்ப, 100 ரூபாய்; 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல், 30 ஆயிரம் ரூபாய் வரை, 110 ரூபாய்; அதற்கு மேல், 50 ஆயிரம் ரூபாய் வரை, 120 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|