நிழல் பகுதிகளில் மொபைல் இணைப்பு தர ரூ.3000 கோடிநிழல் பகுதிகளில் மொபைல் இணைப்பு தர ரூ.3000 கோடி ... எரிபொருள் பயன்பாடு 130.70 லட்சம் டன்னாக குறைவு எரிபொருள் பயன்பாடு 130.70 லட்சம் டன்னாக குறைவு ...
அன்னிய சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு:தமிழகத்திற்கு இரண்டாவது இடம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2013
03:07

புதுடில்லி:சென்ற 2012ம் ஆண்டு, அதிக அளவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்த்த மாநிலங்களில், மகாராஷ்டிரா முதல் இடத்தையும், தமிழகம் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன.அது போன்று, உள்நாட்டு சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்ந்ததிலும், ஆந்திராவை அடுத்து, தமிழகம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
ஆந்திரா:இது குறித்து, மத்திய சுற்றுலா அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:சென்ற 2012ம் ஆண்டு, அயல் நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, 6.33 சதவீதமும், உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, 19.87 சதவீதமும் அதிகரித்துள்ளது.கடந்த ஆண்டு, பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு சென்ற உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, முந்தைய ஆண்டை விட, 15.6 சதவீதம் அதிகரித்து, 86.50 கோடியில் இருந்து, 103.60 கோடியாக உயர்ந்துள்ளது.
இது, கடந்த 2010ம் ஆண்டு, 74.80 கோடியாக இருந்தது.உள்நாட்டைப் பொறுத்தவரை, சென்ற 2012ம் ஆண்டு, ஆந்திராவில் உள்ள சுற்றுலாத் தலங்களை, 20.68 கோடி பயணிகள் பார்த்து ரசித்துள்ளனர். இந்த பட்டியலில், 2011ம் ஆண்டு மூன்றாவது இடத்தில் இருந்த தமிழகம், 18.41 கோடி சுற்றுலா பயணிகளை கவர்ந்து, இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
இதையடுத்து, உத்தரபிரதேசம் (16.84 கோடி பேர்), கர்நாடகா (9.41 கோடி), மகாராஷ்டிரா (6.63 கோடி), மத்திய பிரதேசம் (5.32 கோடி), ராஜஸ்தான் (2.86 கோடி), உத்தரகண்ட் (2.68 கோடி), குஜராத் (2.44 கோடி), மேற்கு வங்கம் (2.27 கோடி) ஆகியவை உள்ளன.இந்தியாவின் மொத்த உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையில், மேற்கண்ட மாநிலங்களின் பங்களிப்பு, 84.5 சதவீதமாக உள்ளது.உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில், கடந்த 2011ம் ஆண்டு, முதலிடத்தில் இருந்த உத்தரபிரதேசம், மூன்றாது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அந்த இடத்தில் இருந்த தமிழகம், இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.அயல்நாட்டு பயணிகள்சென்ற 2012ம் ஆண்டு, இந்தியாவிற்கு வந்த அயல்நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, 2.07 கோடியாக உயர்ந்துள்ளது.
இது, முந்தைய 2010 மற்றும் 2011ம் ஆண்டுகளில், முறையே, 1.79 கோடி மற்றும், 1.95 கோடியாக இருந்தது.சென்ற ஆண்டு, மகாராஷ்டிரா மாநிலம், 51 லட்சம் அயல்நாட்டு சுற்றுலா பயணிகளை கவர்ந்து, முதலிடத்தை பிடித்துள்ளது. தமிழகம், 36 லட்சம் சுற்றுலா பயணிகளை ஈர்த்து, இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
அடுத்த இடங்களில், டில்லி (23 லட்சம்), உத்தரபிரதேசம் (20 லட்சம்), ராஜஸ்தான் (15 லட்சம்), மேற்கு வங்கம் (12 லட்சம்), பீகார் (11 லட்சம்), கேரளா (8 லட்சம்), கர்நாடகா (6 லட்சம்), இமாச்சல பிரதேசம் (5 லட்சம்) ஆகியவை உள்ளன.சென்ற ஆண்டு இந்தியா வந்த மொத்த அயல்நாட்டு சுற்றுலா பயணிகளில், மேற்கண்ட, 10 மாநிலங்களின் பங்களிப்பு, 90.1 சதவீதமாக உள்ளது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை: மகாராஷ்டிரா தலைநகரான மும்பை, இந்தியாவின் வர்த்தக தலைநகரம் என்ற சிறப்பையும் கொண்டுள்ளது. இதனால், அங்கு பன்னாட்டு நிறுவனங்களின் தலைவர்கள், பிரதிநிதிகளிகள் உள்ளிட்டோரின் வருகை அதிகமாக உள்ளது.மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பிறகு சற்று தொய்வை கண்டிருந்த, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை, சமீப ஆண்டுகளில் மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. இதன் காரணமாகவே, பன்னாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில், மகாராஷ்டிரா முதலிடத்தை பிடித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)