பதிவு செய்த நாள்
24 ஜூலை2013
03:15
சென்னை:கடந்த இரு தினங்களில் மட்டும், ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 608 ரூபாய் அதிகரித்துள்ளது.மத்திய அரசு, தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்த, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், டாலர் மற்றும் ரூபாய் மதிப்பில் ஏற்பட்ட சரிவால், தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது.சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,557 ரூபாய்க்கும், ஒரு சவரன், 20,456 ரூபாய்க்கும் விற்பனையானது. 24 காரட், 10 கிராம் சுத்த தங்கம், 27,350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 38 ரூபாய் உயர்ந்து, 2,595 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 304 ரூபாய் அதிகரித்து, 20,760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 10 கிராம் சுத்த தங்கம், 400 ரூபாய் உயர்ந்து, 27,750 ரூபாய்க்கு விற்பனையானது.ஒரு கிராம் வெள்ளி, 44.90 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 41,970 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆக, கடந்த இரு தினங்களில் மட்டும், தங்கம் விலை கிராமுக்கு, 76 ரூபாயும், சவரனுக்கு, 608 ரூபாயும் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|