தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.304 உயர்வுதங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.304 உயர்வு ... நாட்டின் யூரியா இறக்குமதி செலவினம் குறைந்தது நாட்டின் யூரியா இறக்குமதி செலவினம் குறைந்தது ...
வரத்து குறைவால் கொப்பரை விலை உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2013
12:22

கொச்சி:கேரளா மற்றும் தமிழக சந்தைகளுக்கு கொப்பரை வரத்து குறைந்து உள்ளதால், இதன் விலையும், தேங்காய் எண்ணெய் விலையும் உயர்ந்து வருகிறது.இது, தென்னை விவசாயிகளுக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது என, இத்துறையைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஒரு சில வாரங்களில், ஒரு கிலோ தேங்காய் எண்ணெய் விலை, கேரளாவில், 67 ரூபாயிலிருந்து, 70 ரூபாயாகவும், தமிழகத்தில், 63ல் இருந்து, 65 ரூபாயாகவும் உயர்ந்து உள்ளது.ஒரு குவிண்டால், கொப்பரையின் விலை, கேரளாவில், 4,675 ரூபாயில்இருந்து, 4,800 ரூபாயாகவும், தமிழகத்தில், 4,550ல் இருந்து, 4,700 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து, கொச்சி எண்ணெய் வர்த்தகர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் பிரகாஷ் பீ.ராவ் கூறுகையில், " கொப்பரை வரத்து குறைந்துள்ள நிலையில், தேங்காய் எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் பெரிய நிறுவனங்கள் அதிகளவில் கொப்பரையை வாங்கி வருகின்றன. இதையடுத்தே, கேரளாவிலும், தமிழகத்திலும் கொப்பரை விலை அதிகரித்துள்ளது' என்று தெரிவித்தார்.

இந்நிலையில், வட மாநிலங்களில், அடுத்தமாதம் முதல் பண்டிகை காலம் துவங்குவதால், தேங்காய் எண்ணெய்க்கான தேவை அதிகரித்து, இதன் விலை சீராக உயர வாய்ப்பு உள்ளது என, வர்த்தகர்கள் தெரிவித்தனர். இச்‹ழ்நிலையில், ஒரு கிலோ பாமாயில் விலை, 54 ரூபாயாகவும், எண்ணெய் பனை கொட்டையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயின் விலை, 55 ரூபாய் என்ற அளவிலும் சற்று குறைந்து காணப்பட்டன.கேரளாவில், தொடர்ந்து பெய்து வரும் பருவ மழையால், சந்தைகளுக்கு கொப்பரை வரத்து மிகவும் குறைந்து போயுள்ளது.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக, 990 ரூபாயாக இருந்த தேங்காய் எண்ணெய் (15 கிலோ) விலை, தற்போது, 990 ரூபாயாக அதிகரித்துள்ளது என, கொச்சியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)