பதிவு செய்த நாள்
26 ஜூலை2013
12:22
கொச்சி:கேரளா மற்றும் தமிழக சந்தைகளுக்கு கொப்பரை வரத்து குறைந்து உள்ளதால், இதன் விலையும், தேங்காய் எண்ணெய் விலையும் உயர்ந்து வருகிறது.இது, தென்னை விவசாயிகளுக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது என, இத்துறையைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஒரு சில வாரங்களில், ஒரு கிலோ தேங்காய் எண்ணெய் விலை, கேரளாவில், 67 ரூபாயிலிருந்து, 70 ரூபாயாகவும், தமிழகத்தில், 63ல் இருந்து, 65 ரூபாயாகவும் உயர்ந்து உள்ளது.ஒரு குவிண்டால், கொப்பரையின் விலை, கேரளாவில், 4,675 ரூபாயில்இருந்து, 4,800 ரூபாயாகவும், தமிழகத்தில், 4,550ல் இருந்து, 4,700 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து, கொச்சி எண்ணெய் வர்த்தகர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் பிரகாஷ் பீ.ராவ் கூறுகையில், " கொப்பரை வரத்து குறைந்துள்ள நிலையில், தேங்காய் எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் பெரிய நிறுவனங்கள் அதிகளவில் கொப்பரையை வாங்கி வருகின்றன. இதையடுத்தே, கேரளாவிலும், தமிழகத்திலும் கொப்பரை விலை அதிகரித்துள்ளது' என்று தெரிவித்தார்.
இந்நிலையில், வட மாநிலங்களில், அடுத்தமாதம் முதல் பண்டிகை காலம் துவங்குவதால், தேங்காய் எண்ணெய்க்கான தேவை அதிகரித்து, இதன் விலை சீராக உயர வாய்ப்பு உள்ளது என, வர்த்தகர்கள் தெரிவித்தனர். இச்‹ழ்நிலையில், ஒரு கிலோ பாமாயில் விலை, 54 ரூபாயாகவும், எண்ணெய் பனை கொட்டையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயின் விலை, 55 ரூபாய் என்ற அளவிலும் சற்று குறைந்து காணப்பட்டன.கேரளாவில், தொடர்ந்து பெய்து வரும் பருவ மழையால், சந்தைகளுக்கு கொப்பரை வரத்து மிகவும் குறைந்து போயுள்ளது.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக, 990 ரூபாயாக இருந்த தேங்காய் எண்ணெய் (15 கிலோ) விலை, தற்போது, 990 ரூபாயாக அதிகரித்துள்ளது என, கொச்சியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|