பதிவு செய்த நாள்
26 ஜூலை2013
13:13
புதுடில்லி:சர்வதேச சந்தையில், யூரியா விலை குறைந்து உள்ளதால், நடப்பு நிதிஆண்டில், சென்ற ஜூன் வரையிலான முதல் காலாண்டில், யூரியா இறக்குமதி செலவினம், 20 சதவீதம் குறைந்துள்ளது.இதன் காரணமாக, மத்திய அரசின் உர மானியச் செலவினம் குறைந்து உள்ளது.
தற்போது, விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்படும், ஒரு டன் யூரியாவின், அதிகபட்ச சில்லரை விலை, 5,360 ரூபாயாக உள்ளது. அதிகபட்ச சில்லரை விலைக்கும், யூரியா உற்பத்தி மற்றும் இறக்குமதி செலவினத்திற்கும் உள்ள வித்தியாசத் தொகையை, மத்திய அரசு, மானியமாக, உர நிறுவனங்களுக்கு வழங்குகிறது.நடப்பு 2013-14ம் நிதிஆண்டில், மத்திய அரசு, உர மானியச் செலவை, 65,971.50 கோடி ரூபாயாக குறைக்க திட்டமிட்டு உள்ளது.
எனினும், சென்ற ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், இந்தியாவின் யூரியா இறக்குமதி, சென்ற நிதிஆண்டின் இதே காலத்தை விட, 50 சதவீதம் அதிகரித்து, 11.09 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. இதற்கான சராசரி இறக்குமதி செலவினம், டன்னுக்கு, 340 டாலர் என்ற அளவில் உள்ளது. இது, சென்ற முழு நிதிஆண்டில், சராசரியாக, 417 டாலர் என்ற அளவில் இருந்தது.
சென்ற நிதியாண்டில், ஒரு டன் யூரியாவின் இறக்குமதி செலவினம், மிக அதிகமாக, 535 - 540 டாலராக இருந்தது.யூரியாவின் சராசரி விலையில், ஒமன் நாட்டின் ஓ.எம்.ஐ.எப்.சி.ஓ., நிறுவனத்தில் இருந்து இறக்குமதியாகும் யூரியாவின் சராசரி செலவினம் (டன்னுக்கு, 170-175 டாலர்) சேர்க்கப்படவில்லை.
இந்தியாவின் யூரியா உற்பத்தி, ஆண்டுக்கு, 220 லட்சம் டன் என்ற அளவிற்கு உள்ளது. சென்ற நிதியாண்டில், இந்தியா, 80.44 லட்சம் டன் யூரியாவை இறக்குமதி செய்துள்ளது. பொதுத் துறையை சேர்ந்த இந்தியன் பொட்டாஷ், எம்.எம்.டி.சி., எஸ்.டி.சி., ஆகிய மூன்று நிறுவனங்கள் மூலம், யூரியா இறக்குமதி செய்யப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|