பதிவு செய்த நாள்
28 ஜூலை2013
03:18
சென்னை:""காப்பீட்டுத் துறையில், அனுமதிக்கப்படும் அன்னிய முதலீடுகளால், எல்.ஐ.சி.,க்கு பாதிப்பில்லை,'' என, இந்நிறுவனத்தின் தென் மண்டல மேலாளர், சித்தார்த்தன் தெரிவித்தார்.இதுகுறித்து, அவர் கூறியதாவது:வரும், 2020ம் ஆண்டுக்குள், நாட்டில் உள்ள, தகுதி வாய்ந்த அனைவருக்கும், காப்பீடு வழங்க வேண்டும் என, இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய, தென் மண்டலத்தில், தகுதி வாய்ந்த, 2.50 கோடி பேருக்கு காப்பீடு இல்லை. இதில், நடப்பு நிதியாண்டில், 50 லட்சம் பேருக்கு, காப்பீடு வழங்கத் திட்டமிட்டு உள்ளோம்.பொதுத்துறையைச் சேர்ந்த, எல்.ஐ.சி., நிறுவனம் மட்டுமே, காப்பீடுதாரர்களுக்கு, 99.51 சதவீத அளவிற்கு, இழப்பீட்டுத் தொகையை வழங்கி வருகிறது. எனவே, காப்பீட்டுத் துறையில் அனுமதிக்கப்படும் அன்னிய முதலீடுகளால், எல்.ஐ.சி.,க்கு பாதிப்பில்லை.இவ்வாறு, சித்தார்த்தன் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|