பதிவு செய்த நாள்
28 ஜூலை2013
03:23
மும்பை, ஜூலை 28-நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, கடந்த 19ம்தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 99கோடி டாலர் (5,643கோடி ரூபாய்) சரிவடைந்து, 27,920கோடி டாலராக (15.91 லட்சம்கோடி ரூபாய்) வீழ்ச்சி கண்டு உள்ளது. இது, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய சரிவாகும் என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது, இதற்கு முந்தைய வாரத்தில், 2கோடி டாலர் (114கோடி ரூபாய்) அதிகரித்து, 28,019கோடி டாலராக (15.97 லட்சம்கோடி ரூபாய்) இருந்தது.மதிப்பீட்டு வாரத்தில், அன்னியச் செலாவணி சொத்து மதிப்பு, 100கோடி டாலர் வீழ்ச்சி கண்டு, 25,113 கோடி டாலராக சரிவடைந்துள்ளது. எனினும், கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பில் மாற்றம் எதுவுமின்றி, 2,155கோடி டாலர் என்ற அளவிலேயே உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|