பதிவு செய்த நாள்
29 ஜூலை2013
12:33
புதுடில்லி:பணியிடம் மாறினாலும், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இ.பி.எப்.ஓ.,) கணக்கை, ஆன்-லைன் மூலமாக மாற்றிக் கொள்ளும் வசதி, அடுத்த மாதம், 15ம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது.
மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:தற்போதுள்ள நடைமுறைப்படி, வருங்கால வைப்பு நிதியில் கணக்கு வைத்திருக்கும் தொழிலாளர், பணியிடம் மாறினால், அதற்கான, விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். அப்போது தான், தங்களின் பழைய வைப்பு நிதி கணக்கை, புதிய பணியிடத்துக்கு மாற்ற முடியும்.
இந்த நடைமுறை செயல்பாட்டுக்கு வருவதில், தாமதம் ஏற்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, ஆன்-லைன் மூலமாகவே, வைப்பு நிதி கணக்கை மாற்றிக் கொள்ளும் வசதி, வரும், சுதந்திர தினத்தன்று, நடைமுறைக்கு வருகிறது. இதற்காக, அனைத்து நிறுவனங்களிடமும், தொழிலாளர்களின், "டிஜிட்டல்' கையெழுத்தை பெற்றுத் தரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறை அமலுக்கு வந்தால், தொழிலாளர்கள், மூன்று நாட்களுக்குள், தாங்கள் பணியாற்றும் புதிய பணியிடத்துக்கு, தங்களின் வைப்பு நிதி கணக்கை மாற்ற முடியும். இதன்மூலம், ஆண்டுக்கு, சராசரியாக, 13 லட்சம் தொழிலாளர்கள் பயன் பெறுவர் என, மதிப்பிடப்பட்டுள்ளது.இவ்வாறு, அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|