தங்கம் விலை சவரனுக்கு ரூ.96 உயர்வு! மீண்டும் ரூ.21 ஆயிரத்தை தொட்டதுதங்கம் விலை சவரனுக்கு ரூ.96 உயர்வு! மீண்டும் ரூ.21 ஆயிரத்தை தொட்டது ... சீனாவில் இன்டர்நெட் பயன்படுத்துவோர் 60 கோடி பேர் சீனாவில் இன்டர்நெட் பயன்படுத்துவோர் 60 கோடி பேர் ...
இ.பி.எப்.ஓ., "ஆன்-லைன்' சேவைஆகஸ்ட் 15ம் தேதி முதல் அமல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2013
12:33

புதுடில்லி:பணியிடம் மாறினாலும், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இ.பி.எப்.ஓ.,) கணக்கை, ஆன்-லைன் மூலமாக மாற்றிக் கொள்ளும் வசதி, அடுத்த மாதம், 15ம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது.

மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:தற்போதுள்ள நடைமுறைப்படி, வருங்கால வைப்பு நிதியில் கணக்கு வைத்திருக்கும் தொழிலாளர், பணியிடம் மாறினால், அதற்கான, விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். அப்போது தான், தங்களின் பழைய வைப்பு நிதி கணக்கை, புதிய பணியிடத்துக்கு மாற்ற முடியும்.

இந்த நடைமுறை செயல்பாட்டுக்கு வருவதில், தாமதம் ஏற்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, ஆன்-லைன் மூலமாகவே, வைப்பு நிதி கணக்கை மாற்றிக் கொள்ளும் வசதி, வரும், சுதந்திர தினத்தன்று, நடைமுறைக்கு வருகிறது. இதற்காக, அனைத்து நிறுவனங்களிடமும், தொழிலாளர்களின், "டிஜிட்டல்' கையெழுத்தை பெற்றுத் தரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய நடைமுறை அமலுக்கு வந்தால், தொழிலாளர்கள், மூன்று நாட்களுக்குள், தாங்கள் பணியாற்றும் புதிய பணியிடத்துக்கு, தங்களின் வைப்பு நிதி கணக்கை மாற்ற முடியும். இதன்மூலம், ஆண்டுக்கு, சராசரியாக, 13 லட்சம் தொழிலாளர்கள் பயன் பெறுவர் என, மதிப்பிடப்பட்டுள்ளது.இவ்வாறு, அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)