பதிவு செய்த நாள்
31 ஜூலை2013
03:13
மும்பை:நடப்பு ஜூலை 1ம் தேதி முதல், 15ம் தேதி வரையிலான, இருவார காலத்தில், நாட்டின் முன்பேர சந்தைகளில் மேற்கொள்ளப்பட்ட வர்த்தகம், 4.08 லட்சம் கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது.விளை பொருட்கள்:இது, கடந்த ஆண்டின், இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட வர்த்தகத்தை (6.57 லட்சம் கோடி ரூபாய்) விட, 37.86 சதவீதம் குறைவாகும் என, பார்வர்டு மார்க்கெட்ஸ் கமிஷன், (எப்.எம்.சி.,) வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் 1ம் தேதி முதல், ஜூலை 15ம் தேதி வரையிலான காலத்தில், மேற்கொள்ளப்பட்ட வர்த்தகம், கடந்த நிதியாண்டின், இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்டதை விட, 5.70 சதவீதம் குறைந்து, 48.29 லட்சம் கோடியிலிருந்து, 45.54 லட்சம் கோடி ரூபாயாக சரிவடைந்து உள்ளது.நடப்பு ஜூலை மாதம், 15ம் தேதி வரையிலான, இருவார காலத்தில் வேளாண் விளைபொருட்கள் மீதான வர்த்தகம், 48.44 சதவீதம் சரிவடைந்து, 1.07 லட்சம் கோடியிலிருந்து, 55,180 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.கணக்கீட்டு காலத்தில், தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய மதிப்பு மிகு உலோகங்கள் மீதான வர்த்தகம், 44.71 சதவீதம் குறைந்து, 2.83 லட்சம் கோடி ரூபாயில் இருந்து, 1.57 லட்சம் கோடி ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது.
எரிசக்தி:இதர உலோகங்கள் மீதான வர்த்தகமும், 27.84 சதவீதம் சரிவடைந்து, 1.07 லட்சம் கோடியிலிருந்து, 77,060 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.கணக்கீட்டு காலத்தில் எரிசக்தி மீதான வர்த்தகம், 25.38 சதவீதம் குறைந்து, 1.60 லட்சம் கோடி ரூபாயிலிருந்து, 1.20 லட்சம் கோடி ரூபாயாக சரிவடைந்து உள்ளது என, எப்.எம்.சி., அமைப்பின் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|