3.45 கோடி டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு3.45 கோடி டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு ... குறுகிய கால பயிர் கடனுக்கு 7 சதவீத வட்டி மானியம் குறுகிய கால பயிர் கடனுக்கு 7 சதவீத வட்டி மானியம் ...
டாலர் மதிப்பு உயர்கிறது; ரூபாய் சரிவு தொடர்கிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஆக
2013
00:23

மும்பை:அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, நேற்று மேலும் சரிவடைந்தது.
நேற்று முன்தினம், ரூபாய் மதிப்பு, 60.45 ஆக இருந்தது.இந்நிலையில் நேற்று, அன்னியச் செலாவணி வர்த்தகம் துவங்கியதும், ரூபாய் மதிப்பு, 60.61 ஆக சரிவடைந்தது. இது பின், 61.15 - 60.90 என, அதிக ஏற்ற, இறக்கமாக இருந்தது.வர்த்தகத்தின் இறுதியில், ரூபாய் மதிப்பு, முன்தினத்தை விட, 65 கா” சரிவடைந்து, 61.10ல் நிலை பெற்றது.
அமெரிக்கா:நேற்று முன்தினம், அமெரிக்க மத்திய வங்கி, நாட்டின் பொருளாதாரம் வலுப்பெறும் வரை, மாதந்தோறும், 8,500 கோடி டாலர் மதிப்பிற்கு, கடன் பத்திரங்களை வாங்கும் திட்டம் தொடரும் என்று தெரிவித்தது.நேற்று, அமெரிக்காவின் தயாரிப்பு துறை குறித்த புள்ளி விவரம் வெளியானது. அதில், கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, அந்நாட்டின் தயாரிப்பு துறை, வளர்ச்சி கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் அமெரிக்காவில், வேலை இல்லா திண்டாட்டம், கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்திருக்கும் என்ற தகவலும் வெளியானது.இது போன்ற காரணங்களால், இந்திய ரூபாய் உள்ளிட்ட, சர்வதேச கரன்சிகளுக்கு எதிரான டாலர் மதிப்பு, கடந்த இரண்டு நாட்களாக வேகமாக உயர்ந்து வருகிறது.ரூபாய் மதிப்பின் சரிவை தடுக்க, ரிசர்வ் வங்கி, வியாழனன்று, பங்கேற்பு ஆவணங்கள் வாயிலான ஊக வணிகத்திற்கு, கட்டுப்பாடு விதித்தது. இதன்படி, அயல்நாட்டு முதலீட்டாளர்களின் அனுமதிக்கு பின்பே, பங்கேற்பு ஆவணங்கள் மூலம், முதலீட்டு நிறுவனங்கள் முன்பேர ஒப்பந்தம் மேற்கொள்ள முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
ஜப்பான்:இத்துடன், ரிசர்வ் வங்கியும், கடந்த இரண்டு நாட்களாக, அதிக அளவில் டாலரை புழக்கத்தில் விட்டது.இருந்தபோதிலும், ரூபாய் மதிப்பின் சரிவு தொடர்கதையாக உள்ளது. கடந்த ஜனவரி முதல் தற்போது வரை, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, 9.39 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. அதிக மதிப்பிழந்த ஆசிய கரன்சிகளின் பட்டியலில், ஜப்பானின் யென் முதலிடத்திலும், இந்திய ரூபாய் இரண்டாவது இடத்திலும் உள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)