பதிவு செய்த நாள்
07 ஆக2013
00:30
புதுடில்லி:வெளிநாடுகளில் இருந்து, 1 கோடி ரூபாய்க்கும் அதிகமாக நன்கொடை பெற்றவர்களின், வரவு-செலவு கணக்குகளை, வருமான வரித் துறை ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக, மத்திய நேரடி வரிகள் வாரியம், வருமான வரித்துறைக்கு அறிக்கை அனுப்பிஉள்ளது. அதில், நடப்பு 2013-14ம் நிதியாண்டில், சர்வதேச பணப் பரிவர்த்தனை உட்பட, அனைத்து வரி ஆய்வுக்கான புதிய நடைமுறைகள் குறித்து தெரிவிக்கப் பட்டுள்ளன. மேலும், சென்ற 2011-12ம் நிதியாண்டில், அன்னிய நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ், ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை பெற்றவர்களின் வருமான வரி கணக்குகள் குறித்து ஆராயவும் உத்தரவிட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் வலைதளத்தில், வெளிநாட்டில் இருந்து நன்கொடை பெற்றவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், அவற்றில் இருந்து, தகவல்களை பெற்று, ஆய்வு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், வருமான வரித் துறை அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், 15 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட சர்வதேச பரிமாற்றங்கள் அனைத்தையும், கண்டிப்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|