பதிவு செய்த நாள்
07 ஆக2013
00:47
புதுடில்லி:ஜி.எஸ்.எம்., அலைபேசி சேவையில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள், சென்ற ஜூன் மாதத்தில், கிராமப் புறங்களில் இருந்து, 23.30 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை இணைத்து கொண்டுள்ளன.இதையடுத்து, கிராமப்புறங்களில் உள்ள ஜி.எஸ்.எம்., வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, 27.16 கோடியாக அதிகரித்து உள்ளது என, இந்திய அலைபேசி சேவை நிறுவனங்களின் கூட்டமைப்பு (சி.ஓ.ஏ.ஐ.,) தெரிவித்துள்ளது.
மதிப்பீட்டு மாதத்தில், பார்தி ஏர்டெல் நிறுவனம், மிக அதிகபட்சமாக, 12.60லட்சம் கிராமப்புற வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது. இதையடுத்து, இந்நிறுவனத்தின் ஒட்டு மொத்த கிராமப்புற ஜி.எஸ்.எம்., வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, 8.59 கோடியாக வளர்ச்சி கண்டுள்ளது.மேலும், ஐடியா செல்லுலார் நிறுவனம், 8.80 லட்சம் கிராமப்புற வாடிக்கையாளர் களை ஈர்த்து, இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
இதையடுத்து, இப்பிரிவில், இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, 6.87 கோடியாக அதிகரித்துள்ளது. கணக்கீட்டு மாதத்தில்,ஏர்செல் மற்றும் யூனிநார் நிறுவனங்கள் முறையே,3 லட்சம் மற்றும்1.70 லட்சம் கிராமப்புற வாடிக் கையாளர்களை ஈர்த்துள்ளன.இதையடுத்து, மேற்கண்ட நிறுவனங்களின் மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை முறையே, 2.27 கோடி மற்றும் 1.02 கோடியாக வளர்ச்சி கண்டுள்ளது. இருப்பினும், மதிப்பீட்டு மாதத்தில், வோடபோன் நிறுவனம், 2.80 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது.
இதையடுத்து, இந்நிறுவனத்தின் கிராமப்புற மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, 8.40 கோடியாக குறைந்து உள்ளது.உள்நாட்டில்,கிழக்கு உத்தரபிரதேச தொலை தொடர்பு வட்டத்தில் தான், மிகவும் அதிகபட்சமாக, 2.91 கோடி கிராமப்புற ஜி.எஸ்.எம்., வாடிக்கையாளர்கள் உள்ளனர்.நடப்பாண்டு ஏப்ரல் மாத நிலவரப்படி, கிராமப்புறங்களில், தொலை தொடர்பு அடர்த்தி, 41.37 சதவீதம் என்ற அளவில் உள்ளது என, சி.ஓ.ஏ.ஐ., மேலும் தெரிவித்து உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|