பதிவு செய்த நாள்
08 ஆக2013
00:32
புதுடில்லி:நடப்பு 2013 - 14ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நான்கு மாதங்களில், நாட்டின் ஒட்டு மொத்த நேரடி வரி வசூல், 13.27 சதவீதம் அதிகரித்து, 1,57,169கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, சென்ற நிதியாண்டின், இதே காலத்தில், 1,38,751 கோடி ரூபாயாக இருந்தது.
மொத்தநேரடி வரி வசூலில், நிறுவனங்கள் செலுத்திய வரி, 9.75 சதவீதம் உயர்ந்து, 83,932 கோடியில் இருந்து, 92,115 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இதே காலத்தில், தனி நபர் வருமான வரி வசூல், 19.32 சவீதம் வளர்ச்சி கண்டு, 53,289கோடியில் இருந்து, 63,583 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
பங்கு பரிவர்த்தனை வரி வசூல், 1,267 @காடி ரூபாயாகவும், செல்வ வரி வசூல், 38.62 சதவீதம் உயர்ந்து, 145கோடியில் இருந்து, 201 @காடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. மதிப்பீட்டு காலத்தில், நிகரநேரடி வரி வசூல், 10.37 சதவீதம் ஏற்றம் கண்டு, 1,05,684கோடியில் இருந்து, 1,16,645கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|